19 Jan 2025

கடந்த ஆட்சியாளர்கள் தங்களின் தோல்வியின் விளிம்பில் எடுக்கும் ஆயுதம் இனவாதம் - பிரதியமைச்சர் அருண் ஹேமச்சநிதிரா.

SHARE

கடந்த ஆட்சியாளர்கள் தங்களின் தோல்வியின் விளிம்பில் எடுக்கும் ஆயுதம் இனவாதம் - பிரதியமைச்சர் அருண் ஹேமச்சநிதிரா.
கடந்த ஆட்சியாளர்கள் தங்களின் தோல்வியின் விளிம்பில் எடுக்கும் ஆயுதம் இனவாதம் எமது அரசாங்கத்தில் ஒரு காலமும் இனவாதத்தை கையில் எடுக்கப் போவதில்லை என்ற உத்தர வாதத்தை நான் உங்களுக்கு தருகின்றேன் என பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். 

மகுடம் கலை இலக்கிய வட்டம் நடாத்தும் வி.மைக்கல் கொலினின்  “அன்பின் முத்தங்கள் கவிதை நூல் வெளியீட்டு விழா மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தில் சங்கத்தின் தலைவர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது.

 

நிகழ்வின் முதன்மை விருந்தினராக பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கலந்துகொண்டு கவிதை நூலின் சிறப்பு பிரதியைப் பெற்றுக் கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்

 

கடந்த ஆட்சியாளர்கள் தங்களின் தோல்வியின் விளிம்பில் எடுக்கும் ஆயுதம் இனவாதம் ஆனால் எமது அரசாங்கத்தில் எந்த ஒரு கட்டத்திலும் நாம் அதனை முன்னெடுக்க போவதில்லை.

 

எமக்கு எந்தவித பாதிப்புகள் வந்தாலும் நாம் ஒரு காலமும் இனவாதத்தை கையில் எடுக்கப் போவதில்லை என்ற உத்தர வாதத்தை நான் உங்களுக்கு தருகின்றேன்.

 

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தில் அரசியல் நெருக்கடி மாற்றப்பட்டுள்ளது.

 

இருப்பினும் பொருளாதார நெருக்கடி சமூக நெருக்கடிகள் காணப்படுகின்றன. இவற்றை நாம் வேகமாக மாற்றியமைக்க வேண்டிய தேவை உள்ளது.

நாம் நாட்டை மீள கட்டியெழுப்ப வேண்டிய தேவை உள்ளது சமூக மாற்றத்தின் பிரதான பங்கினை இலக்கியவாதிகள் வகிக்கின்றனர்.

 

எமக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் பலமானது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அரசியல் முரண்பாடுகளானது தேர்தல் நிறைவடைந்த பின் அவை கைவிடப்பட வேண்டும்.

 

மக்களுக்காக நாம் இன மத மொழி வேறுபாடு இன்றி ஒன்றிணைய வேண்டும் இதனை மாற்றி அமைத்து நாம் சரியான திசைக்கு மக்களை வழிநடத்த வேண்டிய இடத்தில் இருக்கின்றோம். என அவர் இதன்போது தெரிவித்தார்.

தொடர்ந்து நூல் வெளியீட்டின் வரவேற்புரையை தமிழ் சங்கத்தின் துணைச் செயலாளரால் ரா.பிரதீஷ்காந்த் நிகழ்த்தினார். நூலின்  வெளியீட்டுறையை தமிழ் சங்கத்தின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி மு.கணேசராஜா நிகழ்த்தினார். நூலின் நயவுரையை சிரேஷ்ட விரிவுரையாளர்  மோகனதாஸ் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

 

இதன்போது மேலும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி.பத்மராஜா, மட்டக்களப்பு  மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் கு.பிரணவன், எழுத்தாளர் திருமலை நவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளுக்கும் நூலாசிரியரால் சிறப்பு கவிதை நூற் பிரதிகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 















 


SHARE

Author: verified_user

0 Comments: