கட்டுரை
: மாதவிடாய்க்கு அளிப்போம் மாண்பினை.
(வ.சக்திவேல்)
சர்வதேச
மாவிடாய் சுகாதார தினம் வருடாந்தம் மே மாதம் 28 ஆம் திகதி கடைப்பிடிக்கப்பட்டு வரப்படுகின்றது.
இந்நிலையில்,பெண்கள் மாதாந்தம் அனுபவிக்கும் மாதவிடாய் தொடர்பில் இன்னமும் சமூத்தில்
உரிய விழிப்புணர்வின்மையால் பாடசாலை மாணவிகள் தொடக்கம் வேலைத்தளங்களில் உள்ள பெண்கள்
வரைக்கும் அக்காப்பகுதியில் மிகுந்த அவஸ்த்தைகளை எதிர்கொள்வதாக பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்களும்,
பெண்கள் தொடர்பில் கடமையாற்றுகின்ற அமைப்பினரும் தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாகவே
“மாதவிடாய்க்கு அளிப்போம் மாண்பினை” என்பதற்கிணங்க அவர்கள் செயற்பட்டு வருவதாகவும், தெரிவிக்கின்றனர்.