17 Feb 2024

வீதி அபிவிருத்தி தேவைகள் குறித்து கேட்டறிந்த வர்த்தக இராஜாங்க அமைச்சர்.

SHARE

வீதி அபிவிருத்தி தேவைகள் குறித்து கேட்டறிந்த வர்த்தக இராஜாங்க அமைச்சர்.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் மண்டூர் பகுதிக்கு விஜயம் செய்த வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் அப்பகுதியில் முன்னெடுக்கப்பட வேண்டிய வீதி அபிவிருத்திகள் குறித்து அங்குள்ள மக்களிடம் நேரில் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

மண்டூர், தம்பலவத்தை, உள்ளிட் பல கிராமங்களுக்கு அவரது இணைப்பாளர்களுடன் விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர் கிராமங்களில் மிகவும் அவசியமாக முன்னுரிமை அடிப்படையில் புனரமைப்புச் செய்யப்பட வேண்டிய வதிகளை மக்களிடம் கேட்டறிந்து அவ்வீதிகளையும் பார்வையிட்டார்.

அப்பகுதியில் வருடாந்தம் வெள்ள அனர்த்தினால் பாதிப்புறும் வீதிகளையும், மக்கள் அதிகளவு பயன்படுத்தும் இதுவரையில் புனரமைப்புச் செய்யாமலுள்ள வீதிகளையும் செப்பனிடுவதற்கு தான் முயற்சிப்பதாக இதன்போது இராஜாங்க அமைச்சர் அப்பகுதி மக்களிடம் தெரிவித்தார்.







SHARE

Author: verified_user

0 Comments: