17 Feb 2024

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 250 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல்.

SHARE

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 250 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல்.

தமிழகத்தின் ஆற்றங்கரை அருகே அம்மன் கோயில் குடியிருப்பு பகுதியில் உள்ள தோப்பு ஒன்றிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த  5 இலட்சம் மதிப்பிலான 250 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை மெரைன் பொலிசார் பறிமுதல் செய்யத்துடன், தோப்பின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டம் இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு சமீபகாலமாக கடல் அட்டை, கஞ்சா, ஏலக்காய், அழகு சாதன பொருட்கள், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்டவைகள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறன.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை(16.02.2024) பனைக்குளம் அடுத்த ஆற்றங்கரை அம்மன் கோயில் பகுதியில் அமைந்துள்ள ஒரு தோப்பு ஒன்னில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதப்படுத்தி வருவதாக மெரன் பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆற்றங்கரை மெரைன் பொலிஸ் நிலைய சார்பு ஆய்வாளர் தாரிக் தலைமையிலான பொலிசார் அப்பகுதியில் சோதனைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது அங்கிருந்து தடை செய்யப்பட்ட சுமார் 250 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்த நிலையில் கடல் அட்டைகளை பறிமுதல் செய்த மரைன் பொலிசார் அந்த தோப்பின் உரிமையாளரையும்,கைது செய்து, கடல் அட்டை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட  இருசக்கர வாகனம் மற்றும் பதப்படுத்த பயன்படுத்தப்பட்ட தளபாட பொருட்கள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இக்கடல் அட்டையின் சுமார் 5 லட்ச ரூபாய் இருக்கலாம் என மெரைன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டை மற்றும் இருசக்கர வாகனம், கைது செய்யப்பட்ட நபர்  உள்ளிட்ட அனைத்தையும் மேலதிக விசாரணைக்காக பொலிசார் ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்தில்  ஒப்படைத்துள்ளனர்.






















SHARE

Author: verified_user

0 Comments: