கையடக்க தொலைபேசி திருத்தும் பயிற்சி
நெறி இலவசமாக ஆரம்பித்து வைப்பு.
அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசன் பணிப்பாளர் வே.வாமதேவன், தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மே.வினோராஜ், பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர், கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வடிவேல் சக்திவேல் அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசன் ஆலோசகர் வ.கமலதாஸ், இணைப்பாளர் பி.ரஞ்ஜித்குமார், மற்றும் தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மூன்று மாதங்கள் கொண்ட இப்பயிற்சி நெறியை
கைடக்கத் தொலைபேசி திருத்துவதில் நனே தொழில் நுட்பத்தில் சர்வதேச புலமைவாய்ந்த பயிற்றுவிப்பாளர்
இசட்.ஐ.அஸ்மீர் பயிற்சிகளை வழங்குகின்றார்.
தற்போதைய காலகட்டத்தில் கையடக்கத் தொலைபேசிகளைப்
பழுது பார்ப்பதற்காக பெண்கள் வழங்கும்போது பல விபரீதங்களைச் சந்திக்க முடிவதை நாம்
அவதானிக்கின்றோம். மற்றும் இப்பயிற்சியின் பின்னர் அதிக வருமானங்களை தொழில் வாய்ப்பின்றியிருக்கும்
இளைஞர் ஈட்டமுடியும். இவற்றையெல்லாம் கருத்திற் கொண்டு இப்பகுதி இளையுஞர் யுவதிகளுக்கு
இப்பயிற்சிநெறி முற்றிலும் இலவசமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இதில் கலந்து கொண்ட அதிதிகள்
தெரிவித்தனர்.
.jpeg)
.png)
.jpeg)
.png)
.jpeg)
.png)
.jpeg)
.png)
.jpeg)
.png)
.jpeg)
.png)
.jpeg)
.png)
.jpeg)
.png)
.jpeg)
.png)
.jpeg)
0 Comments:
Post a Comment