9 Feb 2018

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

SHARE
திட்டமிட்டபடி சனிக்கிழமை (10) நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்தியாக்கப்பட்டுள்ள இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் வாக்குப் பெட்டிகள் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
இந்நிலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கும், பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை  380,327 போர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.  பல அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும், கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளதுடன், வேட்பு மனுக்கள் இறுதியாக கடந்த 21.12.2017 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இம்மாவட்டத்தில் ஒரு மாநகர சபை, 2 நகரசபைகள், 9 பிரதேச சபைகளுக்கு இத்தேர்தல் நடைபெறவுள்ளன. அந்த வகையில்…
மட்டக்களப்பு மாநகர சபைக்காக 36031, வாக்காளர்களும். காத்தான்குடி நகரசபைக்காக 29666 வாக்காளர்களும், ஏறாவூர் நகரசபைக்காக 18606 வாக்காளர்களும், ஏறாவூர்பற்று பிரதேச சபைக்காக 55723 வாக்காளர்களும், கோறளைப்பற்று பிரதேசசபைக்காக 48749 வாக்காளர்களும், கோறளைப்பற்று வடக்கு பிரதேசசபைக்காக 16831 வாக்காளர்களும், கோறளைப்பற்று மேற்கு பிரதேசசபைக்காக 20289 வாக்காளர்களும், மண்முனைப் பற்று பிரதேச சபைக்காக 23311 வாக்காளர்களும், மண்முனை தென் மேற்கு பிரதேச சபைக்காக 18367 வாக்காளர்களும், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்காக 44397 வாக்காளர்களும், மண்முனை மேற்கு பிரதேச சபைக்காக 20715 வாக்காளர்களும், போரதீவுப்பற்றுப் பிரதேச சபைக்காக 29595 வாக்காளர்களும், வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 81 வேட்பு மனுக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன, இதில் 79 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு 2 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் இம்மாவட்டத்திலுள்ள 144 வட்டாரத்திலிருந்து 146 போரும், விகிதாசார முறையில் 92 பேருமாக மொத்தம் 238 போர் இந்த தேர்தலில் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்காகவேண்டி 901 பெண் வேட்பாள்கள் உட்பட மொத்தம் 2746 பேர் போட்டியிடுகின்றனர். இம்மாவட்டத்தில் 457 வாக்களிப்பு நிலையங்களில் வாக்கெடுப்புகள் நடைபெறவுள்ளன.

144 வட்டாரங்களில் தேர்தல் நடைபெறவுள்ள இந்நிலையில் இதில் 120 வட்டாரங்களுக்குரிய தேர்தல் கொத்தணி அடிப்படையிலும், 24 வட்டாரங்களுக்கான தேர்தல் அந்தந்த வாக்குச் சாவடிகளிலும், எண்ணப்படவுள்ளன.

மட்டு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக 4437 உத்தியோகஸ்த்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.











SHARE

Author: verified_user

0 Comments: