போரதீவுபற்று பிரதேச சபை தவிசாளர் தலைமையில்
நடைபெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு.
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் வடகிழக்கு ரீதியாக இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச சபைக்கு முன்பாக இன்றயதினம் வெள்ளிக்கிழமை(15.05.2026) முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி, சிரட்டைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
அப்பகுதி பொதுமக்களால் இந்நிகழ்வு ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. இதன்போது அங்கிருந்த மக்கள் விருப்புடன் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால்
கஞ்சியை அருந்தினர்.





0 Comments:
Post a Comment