குருக்கள்மடம் மனிதப்புதைகுளி என அடையாளம்
காணப்பட்டுள்ள பிரதேசத்தை Magneto telluric audio frequency என்ற ஸ்கேனிங் முறைக்கு உட்படுத்துவதற்கு
அனுமதி.
அதன்போது குறித்த பிரதேசத்திற்கு கள விஜயம் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டு வியாழக்கிழமை பிற்பகல் அப்பகுதிக்கு பல விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. அந்த நிலையில் சடுதியாக மழை குறிப்பிட்டதன் நிமித்தம் கள ஆய்வினை முன்கொண்டு செல்வதில் சில தடங்கல்கள் ஏற்பட்டதன் காரணமாக மீண்டும் குறித்த வழக்கு; வெள்ளிக்கிழமை(15.05.2026) திறந்த மன்றிலே அழைக்கப்பட்டது.
அந்த வகையில்; அப்பகுதியில் Magneto telluric audio frequency என்ற ஸ்கேனிங் முறைக்கு உட்படுத்துவதற்கு மன்று வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கி கட்டளை ஆக்கி இருக்கின்து.
இந்த அடிப்படையிலே பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர் ஸ்கேனிங் பொறிமுறைகளை வெள்ளிக்கிழமை ஆரம்பிக்க இருக்கின்றார்கள்.
குறித்த இந்த வழக்கானது மீண்டும் மேலதிக
நடவடிக்கைகளுக்காக எதிர் வருகின்ற திங்கட்கிழமை மன்றிலே அழைக்கப்பட இருக்கின்றது. என
குறித்த வழக்கின் பிரத்தியட்சக முறைப்பாட்டாளர் ரவூப் அப்துல் மஜீத் சார்பாக ஆஜரான
நான் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் இதன்போது
தெரிவித்தார்.
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
0 Comments:
Post a Comment