28 May 2025

வீடமைப்பு திட்டத்திற்காக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 85 மில்லியன் நிதி ஒதுக்கீடு.

SHARE

வீடமைப்பு திட்டத்திற்காக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு  85 மில்லியன் நிதி ஒதுக்கீடு.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மொத்தமாக 85 மில்லியன் ரூபா நிதியினை வீடமைப்பு திட்டங்களுக்காக நாம் ஒதுக்கீடு செய்திருக்கின்றோம். எதிர்வரும் காலங்களில் இது போல் பல வீடமைப்புத் திட்டங்களை நாங்கள் உருவாக்குவதற்கு தயாராக உள்ளோம். அதற்கான நிதி ஒதுக்கீடுகளையும் எமது பிரதேசங்களுக்கும் ஒதுக்கீடு செய்வதற்காக ஜனாதிபதி அவர்களும் முன்னிலைப்படுத்தி இருக்கின்றார். 

என  தேசிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்டவத்திலுள்ள பிரதேச செயலகங்களுக்கான அபிவிருத்திக்குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் கிராமத்தில் பூர்த்தி செய்யப்படாமலுள்ள வீடமைப்புத் திட்டத்தை நிவர்த்தி செய்வதற்காக  அதிலுள்ள 16 பயனாளிகளுக்கு 2.98 மில்லியன் நிதி வழங்கி இன்று செவ்வாய்கிழமை(27.05.2025) வைக்கப்பட்டன. இதன்போது கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நிதி வழங்கிவிட்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் 

2018 ஆம் ஆண்டு வீடு அமைப்பு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. பின்னர் அது  நிதி கிடைக்கப்பெறாத காரணத்தினால் அத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்படாமல் கைவிடப்பட்டுள்ளன. மீண்டும் அத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக எமது தேசிய மக்கள் மத்திய அரசாங்கம் அதற்கான நிதி ஒதுக்கீடுகளை ஒதுக்கீடு செய்திருக்கின்றோம். அந்த அடிப்படையில் மண்முனை தென் எருவில் பற்றி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட குருக்கமடம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டத்தில் உள்ள 16 பயனாளிகளுக்கும் அவர்களுடைய வீடுகளை பூர்த்தி செய்வதற்காக வேண்டிமுதற்கட்டமாக ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. 

அதுபோல் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மொத்தமாக 85 மில்லியன் ரூபா நிதியினை வீடமைப்பு திட்டங்களுக்காக நாம் ஒதுக்கீடு செய்திருக்கின்றோம். எதிர்வரும் காலங்களில் இதுபோல் பல வீடமைப்பு திட்டங்களை நாங்கள் உருவாக்குவதற்கு தயாராக உள்ளோம். அதற்கான நிதி ஒதுக்கீடுகளையும் எமது பிரதேசங்களுக்கும் ஒதுக்கீடு செய்வதற்காக ஜனாதிபதி அவர்களும் முன்னிலைப்படுத்தி இருக்கின்றார்.

வடக்கு கிழக்கு பிரதேசங்களிலே உள்ள வீடு இன்றி தவிக்கின்ற மக்களுக்கு அவர்களின் வீட்டு தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக நாம் இவ்வாறான மாதிரி வீட்டு திட்டங்களை உருவாக்கி அதனூடாக மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக அதற்கான வேலைகளை நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம்.  என தெரிவித்தார் அவர்… ஊடகவியலாளர்கள் அவரிடம் கேட்ட கேள்விகளுக்கும் அவர் பதிலழிக்கையில்…….. 

காணி தொடர்பான சடடம் ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது அந்த விடயம் தொடர்பாக கடந்த பாராளுமன்றத்திலே வடக்கு கிழக்கு உள்ள தமிழ் பிரதிநிதிகள் பிரதமரை சந்தித்து நாங்கள் அது தொடர்பில் பேசி இருந்தோம். அந்த சட்டம் தொடர்பாக தற்கால நிலைமை தொடர்பாகவும் அந்த சட்டத்தில் இருக்கின்ற குறைகள் தொடர்பாகவும் நாங்கள் பேசி இருந்தோம். சட்டத்தை தற்போதைய நிலைக்கு இடைநிறுத்துவதாக பிரதமர் அவர்கள் குறிப்பிட்டு இருக்கின்றார். மேலும் பல விடயங்களை நாங்கள் மக்கள் நலம் சார்ந்ததாக  வடகிழக்கிலே இருக்கின்ற தமிழ் மக்கள் சார்பாகவும் தொடர்ச்சியாக நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். 

அதுபோல் அங்கவீனமானவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தொகை தற்போது அதிகரிக்கப்பட்டு அவர்களின் விசேட உபகரணங்களை பெற்றுக் கொடுப்பதற்காக வேண்டி 50000 ரூபா வரைக்கும் அதனை அதிகரித்திருக்கின்றோம். இவ்வாறு நாட்டு மக்களுக்கு தேவையான பல்வேறு நன்மைகளை எங்களுடைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சார்பாக நாங்கள் தொடர்ச்சியாக நிதிகளை வழங்கி செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம். 

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை குறுகிய காலத்தில் நிறைவேற்றுவதற்கு காலஅவகாசம் எமக்கு போதாது. தற்போது நிலையில் ஆறு மாத காலம் தான் கடந்திருக்கின்றன. இந்நிலையில்  சட்டத்தில் இருக்கின்ற சில விடயங்களை நாங்கள் மாற்ற வேண்டி இருக்கின்றது. அது தொடர்பாக பல விடயங்கள் கலந்துரையாடி அது தொடர்பில் இருக்கின்றன எதையும் குறுகிய காலத்தில் செயற்படுத்த முடியாது. எமது அரசாங்கத்தின் ஐந்து வருட கால ஆட்சி காலத்தில் நிச்சயமாக நாங்கள் தொடர்ச்சியான ஏற்பாடுகள் மேற்கொண்டு வேலைத்திட்டங்களை நாங்கள் செயற்படுத்துவோம். 

உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிவுகளின்படி வடகிழக்கைப் பொறுத்தவரையில் எமக்கு நாம் இரண்டாம் நிலையில் இருக்கின்ற கட்சியாக தான் நாம் இருக்கின்றோம். பல கட்சிகள் எம்முடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்காக முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றார்கள். நாங்கள் இதுவரைக்கும் எந்தவித முயற்சிகளையும் நாங்கள் மேற்கொள்ளவில்லை. ஆனாலும் மற்றைய கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதில் எந்த அபிப்பிராயங்களும் இல்லை. ஆனால் மக்களின் தேவை எதுவாக இருக்குமாக இருந்தாலும் அந்த தேவைகளின் படி நாங்கள் பயணிப்பதில் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.  

நாட்டில் துப்பாக்கி கலாசாரம் என்பது பாதாள உலகம் கோஸ்டிகளின் சம்பந்தப்பட்டவர்களின் நடவடிக்கையாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு குற்ற செயல்களுக்கு பின்னாலும் ஒவ்வொரு கடந்த கால அரசியல்வாதிகள் தொடர்புகள் இருக்கின்றனதனை காண்கின்றோம். அதேபோன்று அதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். அதற்காக பலபேர் கைது செய்யப்பட்டு கொண்டிருக்கின்றார்கள். விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றன அந்த வகையில் சட்டத்தின் பிரகாரம் அவர்களுக்கான தண்டனை வழங்கப்படும். என்றார். 

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர், தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் த.சுபாஸ்கரன், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.







SHARE

Author: verified_user

0 Comments: