28 May 2025

300 மீன்குஞ்சுகள் வெட்டுக்கண்ணிக் குளத்தில் வளர்ப்புக்காக விடப்பட்டன.

SHARE

300 மீன்குஞ்சுகள் வெட்டுக்கண்ணிக் குளத்தில் வளர்ப்புக்காக விடப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர்  பிரிவுக்குட்பட்ட திருப்பழுகாமம் கிராமத்தில் அமைந்துள் வெட்டுக்கண்ணிக் குளத்தில் வளர்ப்புக்காக 300 மீன்குஞ்சுகள் இன்று புதன்கிழமை(28.05.2025) விடப்பட்டன. 

கதிரவன் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன், நன்நீர் மீன்பிடித் திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் சுதாகரன், மற்றும் அப்பகுதி மீனவர்கள், கதிரவன் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் அங்கத்தவர்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர். 

இன்றயத்தினம் முதற்கட்டமாக 300 மீன்குஞ்சுகள் இதன்போது குளத்தில் விடப்பட்டன. அடுத்தவாரம் 30 ஆயிரம் மீன்குஞ்சுகள் இக்குளத்தில் விடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கதிரவன் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் இதன்போது தெரிவித்தனர்.









SHARE

Author: verified_user

0 Comments: