18 Feb 2025

நாட்டில் தற்போது எல்போட் அரசாங்கம் - பா.உ சாணக்கியன்

SHARE

நாட்டில் தற்போது எல்போட் அரசாங்கம் - பா.உ சாணக்கியன்.

களவு எடுத்து பணத்தை கொண்டு வர வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். ஆனாலும் எந்த ஒரு விடயத்தையும் இந்த எல்போர்ட் அரசாங்கம் பூர்த்தி செய்யவில்லை. எமது பிரதேசங்களில் இருக்கும் சிறிய பிரச்சனைகளைகூட அரசாங்க தீர்த்து வைக்கவில்லை. அபிவிருத்திக்குழு கூட்டங்கள் நடைபெறுகின்றன, தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன, ஆனால் நடைமுறையில் எதுவும் நடைபெற்றதாக தெரியவில்லை. இதே விடயம்தான் புதிய அரசாங்கத்திலும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பு பெரியகல்லாறு மத்திய விளையாட்டு கழகத்தின் 18 வது ஆண்டு நிறைவு விழா பெரியகல்லாறு கலாசார  மண்டபத்தில்  கழகத்தின் தலைவர் அகிலன் ஞாயிற்றுக்கிழமை(16.02.2025) மாலை நடைபெற்றது. இதன்போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் 

கல்லாறு மத்திய விளையாட்டு கழகம் தமிழ் தேசியத்துடன் நீண்ட காலமாக இருந்து பயணித்து வருகின்றது. மேலும் எனக்கும் எனது வெற்றிக்கும் பெரிதும் பக்கபலமாகவும் இருப்பவர்கள் இந்த கல்லாறு மத்திய விளையாட்டு கழகத்தினர். இதற்கு மேலாக இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு பக்க பலமாகவும் இந்த விளையாட்டு கழகம் இருந்து வருகின்றது. 

எமது கட்சி தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வு வேண்டும், தமிழ் மக்கள் இந்த நாட்டிலேயே சம அந்தஸ்துடன் வாழ வேண்டும், தமிழ் மக்களுக்கு ஒரு கௌரவமான தீர்வு வேண்டும், என்று செயற்படுகின்ற ஒரு கட்சியாகும். அந்த வகையிலே கல்லாறு மத்திய விளையாட்டு கழகம் எனது கட்சிக்கு துணையாக இருக்கின்றார்கள். என்றால் அவர்கள் தமிழ் இனத்துக்கு துணையாக இருக்கின்றார்கள் என்று தான் அர்த்தம். 

அது போன்று கல்லாறு உட்பட பிரதேச மக்கள் மீது அக்கறையுடன் செயல்படுகின்ற கழகமாகவும் திகழ்கின்றது. இக்கழகம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு செய்து வருகின்ற சேவை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும் அதற்காக வேண்டி எனது உதவிகளும் எனது ஆதரவும் தொடர்ச்சியாக இக்கழகத்திற்கு இருக்கும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். 

கடந்த தேர்தலிலே 65000 வாக்குகளை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எனக்கு வழங்கியிருந்தார்கள். அதற்கு பெரும் ஒத்துழைப்பாக இருந்தது இந்த கல்லாறு பிரதேசமும் கல்லாறு மத்திய விளையாட்டு கழகமும். அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு எப்போது எனது சேவையை தொடர்ந்து கொண்டே இருக்கும்.

அனைவருக்கும் தெரியும் தற்போது புதிதாக ஒரு அரசாங்கம் வந்திருக்கின்றது. நாங்கள் வாகனம் ஓடுவதற்கு முன்னர் வாகனம் பழகும்போது எல்போர்ட் போட்டு கொண்டு தான் ஓடுவது வழக்கம் ஆனால் இந்த அரசாங்கமும் எல்போட் போடாமலே இப்போது பழகிக் கொண்டிருக்கின்றார்கள். 21 மாவட்டங்களிலே இந்த அரசாங்கத்திற்கு மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள். எத்தனையோ நம்பிக்கைகளையும், வாக்குறுதிகளையும், அவர்கள் வழங்கி இருக்கின்றார்கள். பெரியநீலாவணைப் பிரதேசத்திலே புதிதாக ஒரு மதுபானசாலை அமைய பெற்றுள்ளது. அதனை பார்வையிடுவதற்காகவும் நாம் சென்றிருந்தோம். மக்கள் அரசாங்கத்துக்கு வாக்களிக்கும் பொழுது பல விடயங்களை மக்களுக்கு செய்யும் என்ற நம்பிக்கையில் வாக்களித்து இருந்தார்கள். 

களவு எடுத்து பணத்தை கொண்டு வர வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். ஆனாலும் எந்த ஒரு விடயத்தையும் இந்த எல்போர்ட் அரசாங்கம் பூர்த்தி செய்யவில்லை. எமது பிரதேசங்களில் இருக்கும் சிறிய பிரச்சனைகளைகூட அரசாங்க தீர்த்து வைக்கவில்லை. அபிவிருத்திக்குழு கூட்டங்கள் நடைபெறுகின்றன, தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன, ஆனால் நடைமுறையில் எதுவும் நடைபெற்றதாக தெரியவில்லை. இதே விடயம்தான் புதிய அரசாங்கத்திலும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. 

இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை இன்னும் ஒரு மாத காலம் தாமதித்து பார்க்க பார்க்கலாம். இல்லை எனில் ஆர்ப்பாட்டங்களை, செய்ய வேண்டிய நிலைக்குத்தான் நாங்கள் தள்ளப்படுவோம். இது இவ்வாறு அமைந்தாலும் எமது செயற்பாடுகளும் எமது வேலைத்திட்டங்கள் அனைத்தும் எமது பிரதேசங்களை மையப்படுத்தியதாகவே அமையும். 

கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை கௌரவிக்கும் செயற்பாடானது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். ஏனெனில் எமது பிள்ளைகள் கல்வியிலே சிறந்து விளங்க வேண்டும். கல்வியில் சிறந்து விளங்கினால் மாத்திரம்தான் எமது பிரதேசங்களை நாங்கள் மீண்டும் கட்டி எழுப்ப முடியும். ஒரு காலத்திலேயே இலங்கையிலே இருக்கின்ற அரச திணைக்களங்களிலே தமிழர்கள்தான் அதிகளவு பதவிகளை வைகித்திருந்தார்கள். இந்த நிலையில் கல்வியில் எமது மாணவர்களை ஊக்கப்படுத்தினால்தான் எதிர்காலத்திலே மாணவர்கள் சிறந்த நிலையை அடைந்து கொள்வார்கள் அப்போது எமது கிராமங்களும் அபிவிருத்தி அடைந்து கொண்டு செல்லும் என அவர் இதன்போது அவர் மேலும் தெரிவித்தார். 

இதன் போது கழக ரீதியில் விளையாட்டு வீரர்கள் கௌரவிக்கப்பட்டதோடு, கடந்த வருடம்(2024)தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை சித்தியடைந்த மாணவர்கள், க.பொ.த சாதாரண தரத்தில் அதிகூடிய பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள், க.பொ.த உயர் தரத்திற்கு தோன்றி பல்கலைக்கழகம் தெரிவாகியுள்ள மாணவர்களுக்கு வாழ்த்து மடல்களும், பாராட்டு பத்திரங்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டனர். 

இதன் போது கழகத்தின் உறுப்பினர், ஆலய குருமார், கிராம ஆலயங்களின் பிரதிநிதிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், கிராம மக்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இதன்போது பல்வேறு கலை நிகழ்வுகளும், நாட்டிய நிகழ்வுகளும் விழாவை அலங்கரித்தன.






SHARE

Author: verified_user

0 Comments: