கிழக்கில் ஆளனி பற்றாக்குறைகளே உட்கட்டமைப்பு
பற்றாக்குறைகளுக்கு முக்கியமான காரணங்களாகும்
- ஸ்ரீநாத் எம்.பி.
மட்டக்களப்பு மவாட்டம் வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் வியாழக்கிழமை(13.02.2025) நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக் குழு கூடத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….. மாகாண சபைகள் அதி கூடிய அதிகாரங்களுடன் போதியளவு நிதி வளத்துடன் இயங்குமேயானால் மாகாண சபைகளுக்கு உள்ளே காணப்படுகின்ற சகல நிறுவனங்களும் ஆளணி பற்றாக்குறையற்ற, நிர்வாகதிறன் உள்ள மக்கள் சேவையுள்ள, அலுவலகங்களாக இயக்கும்.
மத்திய அரசின் கீழ் உள்ள நிறுவனங்களில் மேலதிக ஆளனிகளும், மேலதிக பண வளமும் வரவு செலவு திட்டத்தின் மூலம் ஒதுக்கப்படும் நிதியினால் மேற்கொள்ளப்படுகின்றன.
மாகாண சபையில் உள்ள நிறுவனங்களுக்கு இவ்வாறான வளங்கள் பகிர்ந்தளிக்கப்படாமையே உரியகாரணமாகும்.
இவ்வாறனை குறைகளைக் களைந்து கிழக்கு மாகாணம் வினைத்திறன் உள்ள சேவையை வழங்ககூடிய ஓர் அரசநிர்வாக கட்டமைப்புக்கு உட்படுத்த வேண்டுமானால், அதிகூடிய அதிகார பரவலாக்கலும், போதியளவு நிதி ஒதுக்கீடும் மத்திய அரசாங்கத்திடம் இருந்து எமக்கு கிடைக்கப் பெறவேண்டும்.
வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் உள்ள ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள், கட்டமைப்பு வசதிகளின் பலவீனங்கள், பலவறையும் நிவர்தி செய்து கொடுக்க வேண்டியுள்ளது. என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment