இடம்பெற உள்ள பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல் கட்சிகளும் சுயேச்சை குழுக்களும் தற்போது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றன.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுவை அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் தலைமை வேட்பாளருமான தர்மலிங்கம் சுரேஷ் தலைமையில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதேவேளை சுயேச்சை குழு சார்பில் வஜ.லவக்குமார் தலைமையில் சுயேட்சை குழு ஒன்று என்று தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது அரசியல் கட்சி கட்சியான தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேர்தலுக்கான தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
மாவட்டத்தில் 3 சுயேச்சை குழுக்களும் ஒரு அரசியல் கட்சியும் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர் சுபியான் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment