6 Jun 2024

உலகத் தன்மம் சமூக அமைப்பின் யாப்பு அங்கீகார நிகழ்வு.

SHARE

உலகத்தன்மம் சமூக அமைப்பின் யாப்பு அங்கீகார நிகழ்வு புதன்கிழமை(05.06.2024) மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

அமைப்பின் அமைப்பாளர் யோ.இதயகீதன்  தலைமையில் வீ.குகதாசன் எஸ்.ஸ்ரீதரன் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உலகத்தன்மம் சமூக அமைப்பு இயங்கு நிலையில் உள்ள மண்முனை வடக்கு, மண்முனை பற்று, மண்முனை தென் எருவில் பற்று, போரதீவு பற்று, ஆகிய நான்கு பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள அமைப்பின் அங்கத்தவர்கள் உறுப்பினர்கள், இணைப்பு உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள், நிறைவேற்று குழு உறுப்பினர்கள், துறைசார் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டு உலகத் தன்மம் சமூக அமைப்பின் யாப்பு அங்கீகாரத்திற்கான கையொப்பங்களையும் இட்டனர்.

உலகத்தன்மம் சமூக அமைப்பின் ஸ்தாபகர் செ.ரா.பயஸ்ரா ஜேந்திரன் மாவட்ட மட்டத்தில் நடந்த யாப்பு அங்கீகார நிகழ்வை சமூக நல்ல நன்மைக்காக இனைய வழி மூலமாக ஆரம்பித்து வைத்தார்

அதனை தொடர்ந்து அமைப்பின் உறுப்பினர்களாகள் யாப்பில் உள்ள தலைப்புகளை எடுத்து உரைத்தனர்.  

இந்நிகழ்வில் அதிகதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அதிபர் திருமதி ஜெ.ஜெ.முரளிதரன், சிரேஷ்ட பொலிஸ் அத்தியச்சகர் அமல் .எதிரிமான்ன உதவி பிரதேச செயலாளர்கள் திருமதி.சுபா சுதாகரன், மாகாண சமூக சேவைகள் உத்தியோகஸ்தர் எஸ்.அருள்மொழி உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டிருந்ததுடன், இதன்போது தெரிவு செய்யப்பட்ட சிறார்களுக்கான பாடசாலை உபகரணங்களும்  அதிதிகளால் இந்நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டன.










SHARE

Author: verified_user

0 Comments: