ஏரிப்பகுதியை ஆழப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் உத்தரவு.
வெளிச்ச வீட்டுக்கு வர்ணம் பூசித்தரும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இருப்பது வருடங்களுக்கு மேலாக பொதுமக்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டபோதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர்.
110 வருடங்கள் பழைமை வாய்ந்த வெளிச்ச வீடு கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வர்ணம் பூசாமல் பழுதடைந்த நிலையில் இருப்பதை அவதானித்த அமைச்சர் அவர்கள் உடனடியாக வர்ணம் பூசுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வெளிச்ச வீட்டுக்கும் நாவலடி கடற்டபகுதிக்கும் இடையே உள்ள ஏரிப்பகுதியை ஆழப்படுத்தி தருமாறு கடற்தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து அத்தனையும், கவனத்தில் எடுத்த அமைச்சர் ஆழப்படுத்தும் வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment