4 May 2024

தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 38 வது நினைவு தின நிகழ்வு.

SHARE

தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 38 வது நினைவு தின நிகழ்வு.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 38 வது நினைவு தின நிகழ்வு வெள்ளிக்கிழமை(03.05.2024) மட்டக்களப்பில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின தலைமை அலுவலகத்தில் கட்சியின் செயலாளரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது

இதன்போது ஸ்ரீ சபாரத்தினத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு முன்னால் நினைவுச்சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டதன் பின்  மௌன அஞ்சலியும்யும் செலுத்தப்பட்டது.

இதன்போது கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா போரதீவுப் பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் யோ.ரஜனி, உட்பட கட்சியின் உயர்மட்ட பிரதிநிதிகள் ஆதரவாளர்கள் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.









SHARE

Author: verified_user

0 Comments: