மட்டக்களப் பில் நடைபெற்ற கடற்கரை டென்னிஸ் விளையாட்டு.
இலங்கை டென்னிஸ் சம்மேளனத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு டென்னிஸ் பயிற்சி மையத்தினால் முதன்முறையாக மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் அண்மையில் கடற்கரை டென்னிஸ் விளையாட்டு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவரும், இலங்கை ரென்னிஸ் அக்கடமியின் உப தலைவருமான சுரேஸ் சுப்பிரமணியம், பிரதம அதிதியாகவும், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிக்காந், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் றஜித சிறி டமின்ட, அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கங் டமயந்த விஜயசிறி, மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாரி எஸ்.ஈஸ்வரன், இலங்கை ரென்னிஸ் அக்கடமியைப் பிரதிநிதித்துவப்படுத்திபாரதிராஜ்பிள்ளை, மட்டக்களப்பு ரென்னிஸ் சங்கத் தலைவர் ஜனன் மற்றும் செயலாளர் எஸ்.தர்சன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ் கடற்கரை டென்னிஸ் விளையாட்டைப் பார்வையிட சுமார் 400 க்கும் மேற்பட்ட விளையாட்டு ஆர்வலர்கள் வருகை தந்திருந்தனர்.
0 Comments:
Post a Comment