தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதேச மட்ட மற்றும் தொகுதிமட்ட அமைப்பாளர்களை நியமனம் செய்யும் கூட்டம் சனிக்கிழமை (19) காலை மட்டக்களப்பில் அமைந்துள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெறவுள்ளதாக தமிழ் மக்க்ள விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் வியாழக் கிழமை (17) ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இதுபற்றி மேலும் அவர் தெரிவிக்கையில்…..
தமது கட்சி சீரான தலைமத்துவத்தின் கீழ் சென்று கொண்டிருக்கின்றது. அதன் காணத்தினால்தான் அண்மையில் நடைபெற்ற உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் அதிகளவு ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தோம். இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சில கிராமங்கள், பிரதேசங்கள், மற்றும் தொகுதிகளுக்குமான அமைப்பாளர்களுக்கான நியமனம் வழங்கப்படாமலுள்ளன. இவற்றுக்கு உரிய நபர்களைத் தெரிவு செய்து நியமனம் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (19) காலை 10 மணிக்கு எமது கட்சிக் காரியாலயத்தில் நடைபெறவுள்ளது.
இந்த அமைப்பாளர்களைக் கொண்டு கிராம மட்டம் முதல் நகர் பகுதி வரைக்கும் கட்சியின் அனைத்துச் செயற்பாடுகளையும் மேலும் விஸ்த்தரித்து மக்கள் பணியையும் மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம் என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment