ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஐயன்கேணி கிராமத்திலுள்ள குடிசையொன்றிலிருந்து 17 வயது நிரம்பிய யுவதியின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குடிசையில் அம்மம்;மாவுடன் வசித்து வந்த கணேசமூர்த்தி கிருஷ்ரெலா என்பவரின் சடலமே ஞாயிற்றுக்கிழமை இரவு 08.10.2017 ஏறாவூர் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
தாயை விட்டு தந்தை பிரிந்து சென்று வேறு திருமணம் முடித்துள்ள நிலையில் தாய் தலைநகரில் ஆடைத் தொழிற்சாலையில் தொழில் செய்து ஜீவனோபாயத்தைக் கவனித்துக் கொள்வதாகவும் மகள் அம்மம்மாவின் பராமரிப்பில் வாழ்ந்து வந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சிறுவயதிலிருந்தே இந்த யுவதி பெற்றோர் மற்றும் உறவினர் பாசமின்றி அம்மம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தவர் எனவும் மாமியின் மகளோடு இருந்து வந்த நெருக்கமான பிணைப்பும் தடைப்பட்ட நிலையில் அவர் மன விரக்தியுற்றிருந்தாகவும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
இச்சம்பவம் பற்றி மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் சடலத்தை உடற் கூற்றுப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment