12 Oct 2017

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் தீர்த்தக் குளத்தை ஆடுத்த ஆண்டு திருவிழாவுக்கு முன்னர் புனரமைத்துத் தருவதாக கிழக்கு மாகாண ஆளுநர் உறுதி

SHARE
மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு திங்கட்கிழமை 09.10.2017 கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம விஜயம்செய்து ஆலயத்தின் குறைபாடுகள், அபிவிருத்திகள் தொடர்பில் ஆராய்ந்ததுடன் ஆலயத்தில் நடைபெற்ற பூசை நிகழ்விலும் கலந்துகொண்டர்.
பூசை வைபவம் நிறைவுபெற்றதும் ஆலய நிருவாகத்தினருடன் அவர் கலந்துரையாடினார்.
இதன்போது, ஆலயத்தின் தீர்த்தக் குளத்தினை புனரமைத்துத் தருமாறு ஆலய நிருவாகத்தினர் கோரியதற்கமைவாக நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபையுடன் இணைந்து தீர்த்தக் குளத்தை அடுத்த ஆண்டு திருவிழாவுக்கு முன்னர் புனரமைத்துத் தர ஏற்ற ஒழுங்குகள் செய்வதாக ஆளுநர் உறுதியளித்தார்.

மேலும் ஆலய வளாகம் துப்பரவு செய்யும் பணிக்கு மேலும் தொழிலாளர்களை ஈடுபடுத்த மாநகரசபைக்குப் பணிப்பதாகவும் அவர் ஆலய நிருவாகிகளிடம் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் கே. துரைராசசிங்கம், கிழக்கு மாகாணசபை செயலாளர்கள், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் வெள்ளக்ககுட்டி தவராஜா மற்றும் ஆலய வண்ணக்கர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.











SHARE

Author: verified_user

0 Comments: