கிழக்கு மாகாண சபையினால் முன்வைக்கப்படுகின்ற அபிவிருத்திப் பங்கீடுகள் விகிதாசார முறையில் முன்வைக்கப்பட வேண்டும் இல்லாவிட்டால் அம்பேப்பிட்டிய சுமணரெத்தின தேரோ போன்று இன்னும் பல தேரோக்கள் மட்டக்களப்புக்கு வர இருக்கின்றார்கள்.
என கிழக்கு மாகாணசபையின் பிரதித்த தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொது சுகாதார பிரிவுக்குட்பட்ட திக்கோடையில் அமையவிருக்கும் ஆரம்ப வைத்திய பராமரிப்பு பிரிவு வைத்தியசாலைக் கட்டடத்துக்குரிய அடிக்கல் செவ்வாய்க் கிழமை (25) நடப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதில் அவர் மேலும் தெரிவிக்கையில்……
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் வாழும் பகுதியிலுள்ள வைத்தியசாலைகள் எந்தவித அபிவிருதிகளையும் காணவில்லை, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது பகுதியிலுள்ள வைத்தியசாலைகளை புணரமைப்பு செய்யவேண்டும் என நான் கிழக்கு மாகாணசபையில் பிரேரணைகளை முன்வைத்துள்ள போதும் தங்கள், தங்களுடைய பகுதியிலுள்ள வைத்தியசாலைகளைத்தான் புணரமைப்புச் செய்கின்றார்கள். இதனையிட்டு தமிழ் தேசியக்கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபையில் பங்காளியாக இருப்பதையிட்டு வெட்கித் தலைகுனியும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கின்றோம்.
கிழக்கு மாகாண சபையினால் முன்வைக்கப்பபடுகின்ற அபிவிருத்திப் பங்கீடுகள் விகிதாசார முறையில் முன்வைக்கப்பட வேண்டும் இல்லவிட்டால் அம்பேப்பிட்டிய சுமணரெத்தின தேரோ போன்று இன்னும் பல தேரோக்கள் மட்டக்களப்புக்கு வர இருக்கின்றார்கள்.
மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திலுள்ள பாடசாலை ஒன்றின் காணியை அபகரிக்கின்றபோது அங்கு சுற்றியுள்ள அரசியல்வாதிகள், அவற்றைத் தடுத்து திநிறுத்தியிருந்தால் தற்போது அம்பேப்பிட்டடிய தேரோ போன்றோர் அரசியல் யதார்த்தத்திற்கு வராமாட்டார்கள்.
மண் அகழ்வுக்கு அனுமதி பெற்றுக் கொடுப்பவர்கள் எவரும் எந்த வேதனைகளையும் அனுபவிப்பதில்லை, மாறாக அப்பாவிப் பொதுமக்கள்தான் தினமும், செத்துமடிந்து கொண்டிருக்கின்றார்கள். விசேட அதிரடிப்படையினர் சுட்டதன் காரணத்தினால்தான் செங்கலடிப் பகுதியில் 2 சகோதரர்களும் நீரில் மூழ்கி அதில் ஒருவர் இறந்தர். ஆனாலும் அவ்வாறு நீரில் மூழ்கிய அவர்களை காப்பாற்றுவதற்கும் பொதுமக்களை அவ்விடத்திற்குச் செல்ல அதிரடிப்படையினர் விடவில்லை, ஆனாலும் மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் கல், தடிகளைக் கொண்டு தாக்குதல் நடாத்தி மிகப்பெரிய யுத்தம் நடைபெற்றது. இந்த யுத்த்தினால் எனது வாகனத்திற்கும், நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வாகனத்திற்கும் சேதம் ஏற்பட்டது.
இவற்றைவிட திங்கட் கிழமை (24) இரவு செங்கலடியில் மேற்கொள்ளப்பட்ட பொலிசாரின் கண்ணீர் புகை வீச்சினால் 9 வயதுடைய பாலகன் ஒருவரும் இறக்கப்பட்டுள்ளார். இதுதான் இன்றய தமிழர்களுடைய நிலமை என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும்.
நீதிபதி இழச்செழியனின் உயிரிழந்த பாதுகாவலரின் மனைவின் காலில் விழுந்து உன்னுடைய கணவர் உயிரைக் கொடுத்து என்னைக் காப்பாற்றியுள்ளார் என மன்னிப்புக் கேட்டார். இது தென்னிலைங்கைளிலுள்ள சிங்கள மக்களுக்கும், சிங்கள அரசியல் தலைவர்களும் தமிழர்கள் எவ்வாறு பண்பாடு உடையவர்கள் என்பதை காட்டியுள்ளது.
தமிழர்களுக்குக் கொடுக்க வேண்டிய அதிகாரப் பரவாலாக்கலைக் கொடுக்க வேண்டும் என, சிங்கள அரசியல் தலைவர்களும், இனவாதிகளும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment