பொலிஸ் காணி அதிகாரங்களுடனான கூடிய அதிகாரங்களுடன் ஒரு சுயாட்சி எமக்குத் தேவை. அந்த சுயாட்சியை அடையும் வரை நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். எமக்குச் சுதந்திரம் கிடைக்கும் வரைக்குமாவது நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். தற்போது சுதந்திரம் கூடியிருக்கும் காரணத்தினாலும், எதுவித அச்சுறுத்தல்களும் இல்லாத காரணத்தினாலும் தேர்தலிலே குதிப்பதற்கு பல வகையானவர்களும் வருகின்றார்கள்.
என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொது சுகாதார பிரிவுக்குட்பட்ட திக்கோடையில் அமையவிருக்கும் ஆரம்ப வைத்திய பராமரிப்பு பிரிவு வைத்தியசாலைக் கட்டடத்துக்குரிய அடிக்கல் செவ்வாய்க் கிழமை (25) நடப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதில் அவர் மேலும் தெரிவிக்கையில்……
கிழக்கு காகாணத்திலுள்ள கிராமப்புற மக்கள் தங்களது சுகாதாரத் தேவையினைப் பூர்தி செய்வதற்கு பல்வேறு பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகின்றனர். தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஓரளவேனும் மக்கள் மத்தியில் ஒரு சில அபிவிருத்திகளைச் செய்து வருகின்றது கடந்த காலத்தில் ஆயுத மற்றும் அகிம்சைப் போராட்டங்களில் தமிழ் மக்கள் பலவற்றை இழந்துள்ளார்கள். இந்த நிலையிலும் நாங்கள் ஒரு நிலையான அபிவிருத்தியை நோக்கிச் செல்லவில்லை அதற்காக வேண்டி நிலையான தீர்வுத்திட்டம் வேண்டும். அந்த திர்வுத் திட்டத்தைப் பெறுவதற்கு தமிழ் மக்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர வேறு எந்த நாதியுமில்லை. தமிழ் மக்களின் உரிமை பற்றி பேசுபவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர வேறு எவருமில்லை.
எமது ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த நல்லாட்சி நாடாளுமன்றம் தற்போது ஒரு அரசியல் சாசன சபையாக மாறி புதிய அரசியலமைப்பை உருவாக்கும் இறுதிக்கட்டத்தில் 4 பௌத்த அமைப்புக்கள் அதற்கு தடைபோடுகின்றார்கள்.
வடக்கு கிழக்கிலும் தற்போது நிலமையை எடுத்து நோக்கினால் எல்லோராலும் போற்றப்படுகின்ற யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது, அரவது மெய்ப் பாதுகாவலர் சுடப்பட்டுள்ளார். ஏறாவூர் பற்றிலே திங்கட் கிழமை (24) விசேட அதிரடிப்படையினரின் சுப்பாக்கிச் சூட்டுக்குப் பயந்து ஆற்றிலே மூழ்கடிக்கப்பட்டு இளைஞர் ஒருவர் இறந்துள்ளார். சிலர் அனுபதி பெற்றும், சிலர் அனுமதி பெறாமலும் மண் அகழ்வுகளில் ஈடுபடுகின்றனர். இருந்த போதிலும் மட்டக்களப்பு மாட்டத்திலிருந்து மண் மாபியாக்கள் மண்ணைக் கடத்திச் செல்பவர்களை கண்டும் காணாததுபோல் காக்சிச்சடை;டை அணிந்தோர் இருக்கின்ற இந்நிலையில், உழவு இயந்திரங்களிலே மணல் ஏற்றும் ஏழைத் தொழிலாளர்களை அச்சுறுத்தி பலி எடுத்துள்ளார்கள். இந்த நிலை மாறவேண்டும்.
மட்டக்களப்பு மாவமட்டத்தில் இனிமேல் மண் அகழ்வு செய்வது என்றால் மாதர் சங்கங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள் போன்ற உள்ளுர் அமைப்புக்களுக்கு மாத்திரம்தான் அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் திங்கட் கிழமை முடிவெடுத்திருக்கின்றோம். மட்டக்களப்பு வளத்தை வேறு மாவட்டத்திற்கு கொண்டு செல்லும் மண் மாபிகாக்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். இந்த நிலமைகள் எல்லாம் மாறவேண்டுமாக இருந்தால் எமக்கு ஒரு நிம்மதியான நிரந்தரமான தீர்வு கிடைத்தாக வேண்டும்.
பொலிஸ் காணி அதிகாரங்களுடனான கூடிய அதிகாரங்களுடன் ஒரு சுயாட்சி எமக்குத் தேவை. அந்த சுயாட்சியை அடையும்வரை நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். எமக்குச் சுதந்திரம் கிடைக்கும் வரைக்குமாவது நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். தற்போது சுதந்திரம் கூடியிருக்கும் காரணத்தினாலும், எதுவித அச்சுறுத்தல்களும் இல்லாத காரணத்தினாலும், தேர்தலிலே குதிப்பதற்கு பலவகையானவர்களும் வருகின்றார்கள். தமிழர்கள் எவருக்கும் ஏனைய இனத்தவர்களுக்கு வாக்களிக்கும் நிலையும் தமிழர்கள் அல்லாதவர்கள் தமிழர்களுக்கு வாக்களிக்காத நிலையும்தான் கிழக்கு மாகாணத்தில் இருந்து கொண்டிருக்கின்றது. எனவே எதிர்வருகின்ற தேர்தல்களில் எமக்குரிய தேர்வு, தமிழ் தேசியக் கூட்டமைப்பாக மாத்திரம்தான் இருக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையின் கீழ் செயற்பபவர்களுக்கே எமது மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாக்களிக்க வேண்டும்.
இற்றைக்கு 34 வருடங்களுக்கு முன்னர், வெலிக்கடைச் சிறைச்சாலையில் ஸ்ரீ லங்கா அரசின் ஆசீர்வாதத்துடன் சிறைக்காவலர்களின் தூண்டுதலின் பெயரில் தமிழீழத்தின் ஆயுதப் போராட்டத்தின் முன்னோடிகளான தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி, டொக்டர் இராஜேந்திரன், மற்றும் ஜெகன் உள்ளிட்ட 35 பேர் சிறைச்சாலையினுள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நாள் யூலை 25 ஆம் திகதியாகும்.
எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் கிழக்கு மாகாணசபையின் அயுட் காலம் முடிகின்றது. மீண்டும் ஒரு தேர்தலைச் சந்திக்க இருக்கின்றோம். கடந்த முறை போலல்லாமல் கடந்த 2012 ஆம் ஆண்டு 6 மாகாணசபை உறுப்பினர்களைக் கொடுத்த எமது மக்கள் நடைபெறவுள்ள தேர்தலில் 8 மாகாணசபை உறுப்பினர்களைக் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கொடுக்க வேண்டும். இதற்காக வேண்டி 85 வீதத்திற்கு மேல் எமது மக்கள் வாக்களிக்க வேண்டும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்த பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் கணேசமூர்த்தி பெற்றுக் கொடுத்த வாக்கினால் அமீரலி நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு அமீரலியின் பிரதேசம் தற்போது அபிவிருத்தி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment