முன்னாள் வர்த்தக கப்பல்துறை அமைச்சர் கலாநிதி ஏ.ஆர். மன்சூர் கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் செவ்வாய்க்கிழமை 25.07.2017 பிற்பகல் தனது 83வது வயதில் காலமானார்.
தற்போது கொழும்பில் வைக்கப்பட்டுள்ள ஜனாஸா அன்னாரின் சொந்த ஊரான கல்முனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு புதன்கிழமை நல்லடக்கம் இடம்பெற்றது.
1977ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக கல்முனைத் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட அவர் தொடர்ச்சியாக 16 வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி அரசில் வர்த்தக, கப்பல்துறை அமைச்சராகவும், முதலாவது யாழ்ப்பாண மாவட்ட அமைச்சராகவும், அதன் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
இறுதியாக குவைத் நாட்டின் இலங்கைத் தூதராக அவர் கடமையாற்றினார்.
இலங்கையின் செல்வாக்கும் பிரபல்யமும் மிக்க அமைச்சர்களில் ஒருவரான இவர் கிழக்கு மாகாணத்தில் பிரபலமான அரசியல்வாதி எம்.எஸ். காரியப்பரின் மருமகனாகும். அவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.
ஜனாஸா திம்பிரிகஸ்யாயிலுள்ள அன்னாரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்து அவரது சொந்த ஊரான கல்முனைக்கு எடுத்து வரப்பட்டு புதன்கிழமை காலை நல்லடக்கம் செய்ப்பட்டது. இதில் தமிழ், முஸ்லிம் சிங்கள அரசியல்வாதிகள் உட்பட கல்வியலாளர்கள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment