மட்டக்களப்பு மாவட்டம் திக்கோடைக் கிராமத்தில் புதிய ஆயுள்வேத மத்திய மருந்கம் ஒன்று தனியார் கட்டடத்தில் செவ்வாய்க் கிழமை (25) திறந்து வைக்கப்பட்டது.
இப்பிரதேசத்தினை மையப்படுத்தி எதுவித வைத்தியசாலைகளும் அற்ற நிலையில் தமது சுகாதாரத் தேவையினைப் பூர்தி செய்வதாயின் களுவாஞ்சிகுடி, மட்டக்களப்பு, மற்றும் கல்முனை போன்ற மிகத் தூர இடங்களுக்குச் சென்றே அப்பகுதி மக்கள் பெற்று வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதி மக்களின் கோரிக்கைக்கிணங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களின் முயற்சியினால் தனியார் கட்டடம் ஒன்றில் தற்போது ஆயுள்வேத மத்திய மருந்தகம் ஒன்று திக்கோடையில் உத்தியோக பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சுதேச மருத்துவத்துறை ஆணையாளர், திருமதி.ஆர்.சிறீதர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர், கி.துரைராசசிங்கம், பிரதித் தவிசாளர் இ.பிரசன்னா, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஞா.கிருஸ்ணபிள்ளை, கோ.கருணாகரம், மா.நடராசா, இரா.துரைரெத்தினம், உள்ளிட்ட கலர் கலந்து கொண்டு இம்மத்திய மருந்தகத்தைத் திறந்து வைத்தனர்.
கிழக்கு மாகாணத்தின் 43 வது ஆயுள்வேத மத்திய மருந்தகமாக தனியார் கட்டடத்தில் திறக்கப்பட்டுள்ள இவ்வைத்தியசாலை தினமும் நோயாளர்கள் மருந்துகளைப் பெறமுடியும் என கிழக்கு மாகாண சுதேச மருத்துவத்துறை ஆணையாளர், திருமதி.ஆர்.சிறீதர் மேலும் தெரிவித்தார்.
இப்பிரதேசத்தில் உள்ள மக்களின் சுகாதாரத் தேவைகள் குறித்து ஊடகங்கள் வாயிலாக பலமுறை சுட்டிக் காட்டப் பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment