ஊழியக்காணி கமநல அமைப்பின் பொதுக்கூட்டம் அண்மையில் துறைநீலாவணைமெதடிஸ்த மிஸன் தமிழ்க் கலவன்
பாடசாலைமண்டபத்தில் ஊழியக்காணி கமநல அமைப்பின் தலைவர் சோ.மயில்வாகனம் தலைமையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடல் கூட்டத்தில் சக்திவிநாயகர் ஆலயத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள 300 வருடம் பழமை வாய்ந்த ஊழியக்காணிக்கான மடத்தினை சக்தி விநாயகர் ஆலயநிர்வாகத்திடம் பரிபாலனம் செய்யகொடுக்கும்படி ந.சுசீலன் முன்மொழிய சு.இளமாறன் வழி மொழிந்தார். இதைசபையோர் ஏகமனதாக அக்கூட்டத்தின் போதே ஏற்றுக் கொண்டனர்.
மேலும் இம்மடத்தைவருடாவருடம் ஊழியக்காணிஅமைப்புபொதுக் கூட்டம் நடாத்தஅனுமதிதரவேண்டும் என்றநிபந்தனையின் அடிப்படையிலேயேமடம் ஆலயநிர்வாகத்திடம்
கையளிக்கப்படவுள்ளதுஎன்றுஊழியக்காணிகமநலஅமைப்பின் தலைவர் சோ.மயில்வாகனம் எமதுசெய்திப் பிரிவுக்கு இதனைத் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடல் கூட்டத்தில் மண்டூர் முருகன் ஆலயத்தின் துறைநீலாவணைக்கானகணக்குப்பிள்ளைகலாநிதி.எஸ்.தில்லைநாதன்,க.கனகசபை(கிராமநிலதாரி),ரீ.கோகுல்ராஜ் (கிராமஉத்தியோகத்தர்), ஆலயங்களின் தலைவர்கள்,பாடசாலைஅதிபர்கள்,ஊழியக்காணிஉரிமையாளர்கள்,ஊர் பொதுமக்கள் உள்ளிட்டபலதரப்பட்டோர் இதன்போதுகலந்துகொண்டனர்.












0 Comments:
Post a Comment