15 Oct 2016

நீர்த்தாங்கிகள் வழங்கி வைப்பு

SHARE
(பழுகாமம் நிருபர்)
போரதீவுபற்று பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கடந்த 11.10.2016ம்திகதி வெல்லாவெளி கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. இதன்போது குடிநீர் சம்பந்தமான பிரச்சினைகளினை ஆராயும் போது பல கிராமங்களில் குடிநீர்தட்டுப்பாடு நிலவுவதாக மக்கள் கூறினார்கள். இது தொடர்பாக
போரதீவுப்பற்று பிரதேசசபை செயலாளரிடம் வினவிய போது போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட நீர் பற்றாக்குறையான அனைத்து கிராமங்களுக்கும் 72000 லீற்றர் குடிநீரினை  எம்மால் முடிந்த வரை அனைவருக்கும் வழங்கிக் கொண்டிருக்கின்றோம். எமது வளங்களை முற்றுமுழுதாக பயன்படுத்தி மக்களின் குடிநீர்ப்பிரச்சினையை இயலுமானவரை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம். எமக்கு தற்போது நீர்த்தாங்கிகள் மிகவும் தட்டுப்பாடு உள்ளதாக தெரிவித்தார். அதனை எதிர்வரும்; அமைப்பினுடாக நீர்த்தாங்கிகள் தருவதாக உறுதியளித்தார்.  அதே போன்று பழுகாமம்   விளாந்தோட்டம் 37ம் கிராமம் 38ம் கிராமம் நெல்லிக்காடு வேற்றுச்சேனை  வெல்லாவெளி விவேகானந்தபுரம் போன்ற கிராமங்களுக்கு வழங்கப்பட்டது.







SHARE

Author: verified_user

0 Comments: