சவூதி அரேபியாவுக்கு உத்தியோர்க விஜயமொன்றை மேற்கொண்டுள்ள மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்,
புனித மக்கா ஹரம் ஷரீபின் பிரதம இமாம் அஷ்ஷேய்க் ஈனூ. பைஷல் ஹஸ்ஸாவியை திங்களன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக இராஜாங்க அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
புனித மக்கா ஹரம் ஷரீபின் பிரதம இமாம் அஷ்ஷேய்க் ஈனூ. பைஷல் ஹஸ்ஸாவியை திங்களன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக இராஜாங்க அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை முஸ்லிம்களுடைய நிலைமை, இலங்கை மட்டக்களப்பில் அமைக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகப் பணிகள், அத்துடன் தனது தலைமையிலான சிறிலங்கா ஹிரா பௌண்டேஷனின் செயற்திட்டங்கள் பற்றியும் ஹிஸ்புல்லாஹ் கலந்துரையாடியுள்ளார்.
அத்துடன் இலங்கைக்கு உத்தியோர்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு புனித மக்கா பள்ளிவாசல் பிரதம இமாமுக்கு, ஹிஸ்புல்லாஹ் அழைப்பு விடுத்துள்ளார்.
இவ் அழைப்பை ஏற்றுக்கொண்ட இமாம் ஈனூ.அஷ்ஷேய்க் பைசல் ஹஸ்ஸாவி அவர்கள் இலங்கை முஸ்லிம்களுக்காக பிரார்த்திப்பதாக குறிப்பிட்டதோடு இலங்கையில் அமைக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு தனது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பில் மக்கா நம்பிக்கை நிதியத்தினுடைய பொது முகாமையாளர் அஷ்ஷேய்க் முஹம்மட் மிர்ஷாலி, டக்தாஸ் நிறுவனத்தின் தலைவர் அஷ்ஷேய்க் அப்துல் ரஹீம் இந்துஜானி, மக்காஹ் அந்துஜானி குடும்ப நிதியத்தினுடைய நிருவாக பொறுப்பாளர் அஷ்ஷேய்க் ஈனூ நஜிமுதீன் அல் அந்துஜானி, மக்கா ஆரிப் அத்துர்கிஸ்தானி நிதியத்தினுடைய தலைவர் அஷ்ஷேய்க் அப்துல் அஸீஸ் ஆரிப்;, அதன் செயலாளர் அஷ்ஷேய்க் அப்துல் ஹபீல் மர்கலானி, மக்காஹ் நிதியத்தினுடைய பொறுப்பாளர் அஷ்ஷேய்க் அப்துல் ஹபீல் துர்கிச்தானி மற்றும் சர்வதேச அரபு கற்கைகளுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷேய்க் துக்தூர் பைஷல் ஆகியோரும் பங்குபற்றியுள்ளனர்.
0 Comments:
Post a Comment