19 Sept 2015

உள் நாட்டு விசாரனையில் எமது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் - எதிர்க் கட்சித்தலைவர் சம்மந்தன்.

SHARE
(ராஜ்)
உள் நாட்டு  விசாரனையில் எமது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். அவை ஒழுங்கானதும் நீதியானதுமாக இடம் பெறாது பெறவும் இல்லை என்பதற்கு திருகோணமலையில் இடம் பெற்ற 05 மாணவர்களின் படு கொலை மற்றும் மூதூர் தன்னார்வ தொண்டர்கள் 17 பேர் கொலை போன்றவற்றிற்கு அமைக்கபட்ட விசேட ஆணைக்குழுவில் வெளிநாட்டு நிபுணர்கள் மற்றும் வெளிநாட்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் செயற்பட்ட போதும் அவர்களால் இலங்கை அரசாங்கத்துடன் நீதியான விசாரனையை மேற் கொள்ள முடியாது என சில மாதங்களில் வெளியேறியுள்ளனர் இவ்வாறான அனுபவங்கள் மூலம்
உள் நாட்டு விசாரனையில் எமது மக்கள் நம்பிக்கையிழுந்துள்ளனர் எனவே சர்வ தேச விசாரனையையே நாம் கோருகின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இலங்கையின் எதிர் கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

சனிக்கிமை (19) திருகோணமலை குச்சவெளி பிரதேச பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் திரியாய் பாடசாலையில் இடம் பெற்ற பிரச்சினை வெளிப்பாட்டுக் களத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவர் தொடர்ந்து உரையாற்றும் போது…  

நான் முதலில் திருகோணமலை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் அதன் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் அவை இரண்டின் மூலமே எனக்கு எதிர் கட்சித்தலைவர் பதவி கிடைத்தது. என்னுடைய 33 வருட நாடாளுமன்ற அனுபவத்தில் நான் எதிர்க்கட்சியிலே உள்ளேன் எனவே இருக்கும் நாடாளுமன்ற பிரதிநிதிகளுடன் ஒப்பிடும் போது நீண்டகாலம் எதிர்கட்சியில் இருந்தமையால் நாம் இதற்கு பொருத்தமானவன் என எண்ணுகின்றேன். தமிழ் மக்களுக்கு நியாயமான அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஏனைய நாடுகளில் வழங்கப்ட்டுள்ளவாறான நாகரிகமான தீர்வு ஒன்று கிடைக்கும் வரை நான் எதிர் கட்சியிலேயே இருப்பேன். 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உடைய காலத்தில் அவர் தமிழர்களுக்கு நிரந்தரமான தீர்வு ஒன்று கிடைப்பதற்கு அவர் விரும்பவில்லை மாறாக இலங்கையில் உள்ள தமிழ் மக்களக்கு பிரச்சினை மேல் பிரச்சினையை கொடுப்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைத்து இந்த நாட்டைவிட்டு குறிப்பாக இளைஞர்களை வெளியேற்றுவதன் மூலம் தமிழர்களுக்கு இந்த நாட்டில் எந்த பிரச்சினையும் இல்லை என்பதை சர்வதேசத்திற்கு தெரியப்படுத்த எண்ணியிருந்தார். அவ்வாறு தற்போது இந்தியா மற்றும் ஏனை நாடுகளில் எமது மக்கள் பத்து இலடசத்திற்கு மேல் வாழ்ந்து வருகின்றனர். என அவர் தெரிவித்தார்.

இதன்போது குச்சவெளி பிரதேச பெண்கள் வலையமைப்பால் குச்சவெளி  பிரதேச மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளான யானை தொல்லை, மற்றும் சமுர்த்தி முத்திரை இல்லாமை, நிரந்தர வீடுகள் இல்லாமை,  காணிகளுக்கான உறுதிப் பத்திரங்கள் இல்லாமை, போன்ற பிரச்சினைகள் உள்ளடங்கிய மகஜர் ஒன்றும் எதிர்க் கட்சித் தலைவரிடம், கையளிக்கப்பட்டது. இதற்கான நடவடிக்கைகளை தாம் துரிதமாக முன்னெடுப்பதுடன் குச்சவெளி பிரதேச மக்களுடைய பிச்சினைகளை தீர்ப்பதற்கான ஒரு விசேட திட்டமிடலை நடாத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தான் திட்டமிட்டுள்ளதாகவும், இதன்போது மக்களிடம் எதிர்க் கட்சித்தலைவர் உறுதியளித்தார்.








SHARE

Author: verified_user

0 Comments: