19 Sept 2015

செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாவையில் நோயாளர் விடுதி திறந்து வைப்பு

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் செட்டிபாளையம் பிரதேச வைத்தியசசாலையில் புதிதாகக் கட்டப்பட்ட நோயாளர் விடுதி திறந்து வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை(19) மாலை நடைபெற்றது.

கிழக்கு மாகாணசபையின் 11 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் இந்நோயாளர் விடுதி கட்டப்பட்டுள்ளது.
இவ்வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ரி.மிருனாளன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் பிரதம அதிதயாகக் கலந்து கொண்டு விடுதியைத் திறந்து வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் பி.இந்திரகுமார், கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான கோ.கருணாகரம், இரா.துரைரெத்தினம், மா.நடராசா, ஞா.கிருஷ்ணபிள்ளை, மற்றும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ரி.கருணாகரன், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.சதுர்முகம், உட்பட கிராம பெரியோர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.











SHARE

Author: verified_user

0 Comments: