அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அலிகம்பை கிராம அலுவலர் பிரிவில்; சுமார் 10 முதல் 12 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று ஞாயிற்றுக்கிழமை (02) மாலை இறந்துள்ளது.
இந்த நிலையில், இறந்த யானையை அக்கரைப்பற்று, திருக்கோவில் மற்றும் பொத்துவில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று திங்கட்கிழமை சென்று பார்வையிட்டனர்.
அக்கரைப்பற்று, திருக்கோவில் மற்றும் பொத்துவில் வனஜீவராசிகள் வலயத்தினுள் இந்த வருடத்தின் ஜனவரி மாதத்திலிருந்து ஓகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியினுள் எட்டு யானைகள் இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment