வரலாற்றுப் புகழ் மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவம் இன்று வியாழக்கிழமை காலை (13) இடம்பெற்றது.
பஞ்சமுக விநாயகருக்கு வசந்த மண்டபத்தில் பூஜை இடம்பெற்ற பின்பு சித்திரத் தேரில் ஆரோகணித்ததும் தேரோட்டம் நடைபெற்றது. நாட்டின் நாலாபுறத்திலிருந்தும் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான அடியவர்களின் அரோகரா கோஷத்தின் மத்தியில் வடம்பிடித்திழுக்க தேர் வெளிவீதி வலம் வந்தது.
ஆண்கள் அங்கப்பிரதட்சணம் செய்தும், பெண்கள் கற்பூரச் சட்டி ஏந்தியும் தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். பிதிர்க்கடன் தீர்க்கும் அடி அமாவாசைத் தீர்த்தம் ஆலய தீர்த்தக் குளத்தில் நண்பகல் 12.00 மணிக்கு இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment