5 Mar 2015

மட்டு: பட்டிருப்பு தொகுதியில் காணப்படும் 4 மிக முக்கிய தேவைகளை பூர்தி செய்து தருமாறு ஜனதிபதியிடம் கேண்டுகோள்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டிருப்பு தொகுதியில் காணப்பட்டு பிதான மிக முக்கி தேவைகளை நிவர்தி செய்து தருமாறு கோரி செவ்வாய்க் கிழமை (03) திருகோணமலயில் நடைபெற்ற கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மகஜர் ஒன்று தான் கையளித்ததாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மகாணசபை உறுப்பினருமான ஞானமுத்து கிஷ்ணபிள்ளை (வெள்ளிமலை) கூறினார்.

இவ்விடையம் தொடர்பில் அவர் மெலும் தெரிவிக்கையில்…..

பட்டிருப்பு தொகுதியின் சனத்தொகை பரம்பலுக்கு ஏற்ப இத்தொகுதியில் அமைந்துள்ள 3 பிரதேச செயலாளர் பிரிவுகளை பிரித்து 5 பிரதேச செயலாளர் பிரிவுகளாக்குதல்,

இத்தொகுதியில் காணப்பட்டுவரும், 3 பிரதேச சபைகளை 5 பிரதேச சபைகளாக்குதல்,

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ் பிரதேசங்களிலும், குறிப்பாக காட்டு யானைகளின் தாக்குதல் அதிகமாகவுள்ள பட்டிருப்புத் தொகுதியில் அமைந்துள்ள படுவான்கரைப் பிரதேசத்திலுள்ள அனைத்து வீதிகளுக்கும் வீதி மின் விளக்குகளை அமைத்துத்தரல்,

வெல்லாவெளி பிரதேசத்திலுள்ள தும்பாலை ஆற்றைப் புணரமைத்து, தும்கேகேணிக்குளத்துடன் இணைத்தல். போன்ற போரிக்கைகள் அடங்கிய மகஜரை தினாதிபதியிடம் தான் நேரில் கையளித்ததாக ஞானமுத்து கிஷ்ணபிள்ளை (வெள்ளிமலை)  மேலும் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: