13 Jan 2015

பரிசுத்த பாப்பரசர் இலங்கை வந்தடைந்தார்

SHARE
பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தை சற்று முன்னர் 09.05 மணியளவில் கொழும்பு   கட்டுநாயக விமான நிலையத்தை வந்தடைத்தார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வருகைதந்துள்ள பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் இலங்கை மக்களின் அன்பு மழையால் விமான நிலையத்தில் வைத்து வரவேற்கப்பட்டார்.

சிறப்பு நிகழ்வாக அவரை வரவேற்கும் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முதற் பெண்மணி ஆகியோர் கலந்து கொண்டு பரிசுத்த பாப்பரசரை வணங்கி வரவேற்றனர். அத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , அவரது பாரியார் , சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் பல முக்கிய அரசியல் பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பாப்பரசரை வணங்கி வரவேற்றனர்.

அத்துடன் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் ஆயர்கள், அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் இந்த வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

வருகை தந்த பாப்பரசரை வரவேற்கும் நிகழ்வில் மும்மொழி மற்றும் சகல மதத்தைச் சார்ந்த சிறுவர்களும் பங்கேற்று பாப்பரசரை நோக்கி தமது அன்பு மகிழ்ச்சியை பொழிந்தனர். முப்படையினரின் இராணுவ மரியாதையை தொடர்ந்து நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன் பின்னர் வத்திக்கான் நாட்டின் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.

அதன்பின்னர் பரிசுத்த பாப்பரசரின் வருகையை முன்னிட்டு நாட்டின் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவும் அதனைத்தொடர்ந்து பரிசுத்த பாப்பரசரின் உரைகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.








SHARE

Author: verified_user

0 Comments: