அரும்பு-
நாட்டில் பல பாகங்களிலும் பெய்துவரும் அடைமழை காரணமாக பல மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மக்கள் நிர்க்கதியாகி இடைத்தங்கல் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு அவர்களுக்குரிய சமைத்த உணவுகள் மற்றும் அத்தியவசியபொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தான் மட்டக்களப்பு மாவட்டம் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்கள் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இடைத்தங்கல் முகாம்களுக்கு விஜயம் செய்து மக்களுக்குத்தேவையான அத்தியவசிய பொருட்களை வழங்கி வைத்தார். இதில் போரதீவப்பற்று பிரதேச செயலாளர் ந.வில்வரத்னமும் கலந்துகொண்டார்.
பழுகாமத்தில் இரண்டு இடைத்தங்கல் முகாம்களில் சுமார் 300 குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனை இன்று மாலை மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடி அவர்களுக்குத் தேவையான அத்தியவசிய பொருட்களினை (பாய் வெற்சீற்)வழங்கி வைத்தார்.
பழுகாமம் பெரியபோரதீவு வெல்லாவெளி வேற்றுச்சேனை பட்டிப்பளை பிரதேசம் நேரில் சென்று பார்வைிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment