11 Dec 2014

சித்திரப் போட்டியில் முதலாமிடத்தினைப் பெற்ற வெல்லாவெளி கலைமகள் வித்தியாலய மாணவிக்கு பரிசு

SHARE


வேள்ட் விசன் பண்ட் லங்கா நிறுவனத்தினால் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில் முதலாமிடத்தினைப் பெற்ற விவேகானந்தபுரத்தைச் சேர்ந்த  மட்.வெல்லாவெளி கலைமகள் வித்தியாலய மாணவி ரவிச்சந்திரன் விதுர்சனாவுக்கு அந் நிறுவத்தினால் பரிசு வழங்கும் நிகழ்வு நேற்று  புதன் கிழமை (10) வேள்ட் விசன் பண்ட் லங்கா நிறுவனத்தின் களுவாஞ்சிக்குடி கிளைக் காரியாலயத்தில் இடம் பெற்றது.


களுவாஞசிக்குடி கிளையின் முகாமையாளர் நயில்ஸ் ஈஸ்வரநாதன் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில்   அந்நிறுவனத்தின் இலங்கைக்கான நிறைவேற்றுப் பணிப்பாளர் கே.பிறின்ஸ்நாயகம் இ பிராந்திய முகாமையாளர் எஸ்.சந்திரகுமார் உட்பட நிறுவன அதிகாரிகளும் கலநது கொண்டிருநதனர்.

வேள்ட் விசன் பண்ட் லங்கா நிறுவனத்திநிறுவனத்தின் பத்தாவது ஆண்டு நிறைiவயொட்டி அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட இப் போட்டியில் 600 மேற்பட்ட சித்திரங்கள் கிடைக்கப் பெற்று அவற்றுள் இம்மாணவி முதலாமிடத்தினை பெற்றுள்ளார்.

இதற்காக இருபதினாயிரம் ரூபாய் பணப்பரிசும் சாண்றிதழும்  வேள்ட் விசன் பண்ட் லங்கா நிறுவனத்திநிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அவர்களினால் அவ் மாணவிக்கு வழங்கிவைக்கப்பட்டது.


இவற்றினை விட மேலும் இந் நிறுவன 10 வது ஆண்டு நிறைவையொட்டி  கஸ்ர பிரதேச விசேடதேவையுடைய மாணவர்களுக்கு தேவையான துவிச்சக்கரவண்டி உட்பட அத்தியா
வசியமான பொருட்கள் மற்றும் மட்;டக்களப்பு பிரதேசத்தினை அண்டிய பாடசாலைகளில் இயங்கி வரும் சுகாதரர கழகங்களுக்கு பயிற்சிகளும் பொருட்களும் வழங்கிவைக்கப்படவுள்ளதாக இந்நிறுவனத்தின் பிரந்திய முகாமையாளர் நயில்ஸ் ஈஸ்வரநாதன் இதன் போது தெரிவித்தர்



SHARE

Author: verified_user

0 Comments: