16 Mar 2026

உற்பத்தித்திறன் நிறைந்த வளமான கிராமம்

SHARE

"உற்பத்தித்திறன் நிறைந்த வளமான கிராமம்" எனும் தொனிப்பொருளில் சமூக உற்பத்தித்திறன் நாடாளாவிய மாதிரிக் கிராம திட்டம்  போரதீவுபற்று புன்னங்குளம் கிராமத்தில் அங்குரார்ப்பணம்.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட புன்னக்குளம் கிராமத்தில் இருந்து 50 குடும்பங்களை மாத்திரம் தெரிவு செய்து "உற்பத்தித்திறன் நிறைந்த வளமான கிராமம்" எனும் ஊக்குவிக்கும் திட்டம் இன்று திங்கட்கிழமை (16.03.2026)  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது, பெயர்ப்பலகை திரை நீக்கம் செய்யப்பட்டதுடன் , சமூக உற்பத்தி திட்டம் பற்றிய காணொளி இடப்பட்டதை தொடர்ந்து , 50 பயனாளிகளுக்கு எதிர்கால சமூக உற்பத்தி திட்ட கையேடுகளும் மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் போரதீவுபற்று உதவிப் பிரதேச செயலாளர் சி.கமல்ராஜ் , பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆ.சுதாகரன் , பிரதேச அபிவிருத்தி குழு தலைவரின் பிரதிநிதி ம.மனோதினி, பிரதேச சபை உறுப்பினர்கள், பிரஜா சக்தி உறுப்பினர்கள், கிராம உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.























SHARE

Author: verified_user

0 Comments: