26 Sept 2025

இலங்கை இராணுவமும் ICST பல்கலைகழக மாணவர்களும் இணைந்து கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தில் சிரமதானம்.

SHARE

 

இலங்கை இராணுவமும் ICST பல்கலைகழக மாணவர்களும் இணைந்து கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தில் சிரமதானம்.

இலங்கை இராணுவத்தினரும் International campus of Science and Technology  (ICST) பல்கலைகழ மாணவர்களும் இணைந்து கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் புணானை தொடக்கம் நாவலடி வரையான சுமார் 16 கிலோமீட்டர் வரையான பாதையின் இரண்டு பக்கங்களையும் துப்பரவு பணிகளில் வியாழக்கிழமை(15.09.2025) ஈடுபட்டனர். 

குறித்த இப்பிரதான போக்குவரத்து மார்க்கத்தைப் பயன்படுத்துவோர் வீதியின் இருமருங்கிலும், குப்பைகளை போடுவதனை தவிர்க்க்க வேண்டும் என இதன்போது இராணுவத்தின் கிழக்கு கட்டளை தளபதி இதன்பேது தெரிவித்தார். 

குப்பைகூழங்களை இப்பாதையினை பயன்படுத்துவோர் வீசுவதனால் இப்பாதையில் வனவிலங்குகள் அவற்றை சாப்பிட வருவதனாலும், குப்பைகள் அழுகி துர்நாற்றம் வீசி இப்பாதையினை பயன்படுத்துவோர் மற்றும் விவசாயிகள் பல்வேறு அசௌகரியங்களையும் உயிர் ஆபத்துகளையும் எதிர்கொண்டு வருகின்றனர். 

இதனை தவிர்க்கும் முகமாக இலங்கை இராணவத்தின் கிழக்கு கட்டளை தளபதியின் மேஜர் ஜெனரல் துளுடீறு ஜே.எஸ்.பி.டப்ளியு.பல்லேகும்பர,மேஜர் ஜெனரல் ஜி.பி.பி.குலத்திலக்க, மற்றும் ICST   பல்கலைகழகத்தின் தலைவர் எம்.எச்.ஏ ஹிராஸ் ICST உபவேந்தர் சிரியானி விக்ரமசிங்க, பதிவாளர் பீ.டி.ஏ ஹசன், பிரதேச சபை உறுப்பினர் தாஹிர், மூவ் கல்குடா டைவர்ஸ்  அனர்த்த அவசர சேவைப்பிரிவின் பிரத்தியேக ஆலோசகர் ஏ.எஸ்.எம் சதீக், மாணவர்கள், இராணுவத்தினர் என பலரும் இதன்போது பங்கேற்றறு துப்பரவுப் பணிகைளை முன்னெடுத்திருந்தனர்.



















SHARE

Author: verified_user

0 Comments: