11 Jun 2025

தமிழரசு கட்சி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு.

SHARE

தமிழரசு கட்சி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு. 

இலங்கை தமிழரசு கட்சி சார்பில் உள்ளூராட்சி மன்ற  தேர்தலில்  மட்டக்களப்பு மாவட்டத்தில்  வெற்றி பெற்ற  வேட்பாளர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு செவ்வாய்கிழமை(10.06.2025) மட்டக்களப்பு அமெரிக்க மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது. 

இலங்கை தமிழரசு   கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  இரசமாணிக்கம் சாணக்கியன் தலைமையில் இடம் பெற்ற  நிகழ்வில், உள்ளுராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான உள்ளுராட்சி மன்ற உரிமைகளும் அதன் பொறுப்புக்களும், பொது மக்களுக்கான கடமைகளை முன்னெடுத்தலும் தொடர்பான விளக்க உரைகள், என்பன இதன்போது கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களால் கருத்துத் தெரிவிக்கப்பட்டன. 

பின்பு சத்தியப் பிரமாண நிகழ்வும் இடம்பெற்றது தோடு, வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களால் வழங்கி வைக்கப்பட்டன. 

இலங்கை தமிழரசு கட்சி சார்பில் உள்ளூராட்சி மன்ற  தேர்தலில்  மட்டக்களப்பு மாவட்டத்தில் 11  உள்ளூராட்சி சபைகளிலும் வெற்றி பெற்ற 84 வேட்பாளர்களின் சத்திய பிரமாண  நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். 

இதன்போது தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர்களான ஞானமுத்து சிறிநேசன், வைத்தியர் இ.சிறிநாத் கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.









SHARE

Author: verified_user

0 Comments: