சிங்கள கட்சிகள் வடக்கு கிழக்கு ஆளக்கூடாது,
சிங்களவர்களுக்கு வாக்களிக்க கூடாது என்று கூறிவிட்டு நீங்கள் செய்யும் வேலை சரியா சாணக்கியன் எம்.பி கேள்வி
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியோடும், தேசிய மக்கள் சக்தியினோடும் இணைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா)
முடிந்தால் ஜனாவை உங்கள் கட்சியின் இருந்து நீக்கி காட்டுங்கள் செல்வம் அடைக்கலநாதனுக்கு சவால் விடுகின்றேன்.
சிங்கள கட்சிகள் வடக்கு கிழக்கு ஆளக்கூடாது, சிங்களவர்களுக்கு வாக்களிக்க கூடாது என்று கூறிவிட்டு நீங்கள் செய்யும் வேலை சரியா என கேள்வி எழுப்பியுள்ளார்.
என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அவரது காரியாலயத்தில் வியாழக்கிழமை(12.06.2025) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
எங்களுடைய ஆதரவுடன் முஸ்லிம் மக்கள் அதிகளவு செறிந்திருக்கும் சபைகளிலே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு எமது ஆதரவை வழங்கவுள்ளோம்.
இலங்கை தமிழரசு கட்சி போட்டி போட்ட 11 சபைகளிலே ஆறு சபைகள் தற்பொழுது பிரதானமாக அதாவது இலங்கை தமிழ் சிறப்பு போட்டி போட்டு 11 சபையில் தமிழரசு கட்சி தமிழர்கள் பெரும்பான்மையாக ஆட்சி அமைக்கக்கூடிய ஒன்பது சபையிலே ஆறு சபையினுடைய ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி இருக்கிறது.
அதிலே தவிசாளர் பிரதித் தவிசாளர் இருப்பதவிகளும் இலங்கை தமிழர் கட்சியை சேர்ந்தவர்களுக்கே கிடைத்திருக்கின்றது. அந்த வகையிலே எங்களுக்கு இதிலே உதவியாக இருந்திருக்கிற சுயேற்சைக் குழுக்கள் அதோடு ஐக்கிய மக்கள் சக்தி, கட்சி ஆகியயோருக்கு நாம் நான்றி செலுத்துகின்றோம்.
எங்களுடைய ஆதரவுடன் முஸ்லிம் மக்கள் அதிகளவு
செறிந்திருக்கும் சபைகளிலே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு எமது ஆதரவை வழங்கவுள்ளோம்.
0 Comments:
Post a Comment