சட்ட விரோத மதுத் தயாரிப்பு, விற்பனை
மற்றும் நுகர்வினால் ஏற்படும் பாரதூர விளைவுகள் பற்றி சமூகத்தை விழிப்புணர்வூட்டும்
நிகழ்வுகள்.
சட்ட விரோத மது உற்பத்தி, விற்பனை, நுகர்வு ஆகியவற்றினால் ஏற்படும் பாரதூர விளைவுகள் பற்றி சமூகத்தை விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகள் இடம்பெற்று வருவதாக சேர்க்கிள் இளம் பெண்கள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஜானி காசிநாதர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு மற்றும் ஏறாவூர்ப்பற்று ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.வவுணதீவில் இடம்பெற்ற விழிப்புணர்வு நடைபவனி,
தெரு நாடகம் ஆகிய நிகழ்வுகள் குறித்து கருத்துத்
தெரிவித்த இளம் பெண்கள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஜானி,
சட்ட விரோத மதுப்பாவனையால் ஏற்படும் விளைவுகள் பெண்களையும் சிறுவர்களையும் வெகுவாகப் பாதித்திருக்கின்றன. அத்துடன் அது இள வயதினரை மதுப்பாவனையின்பால் ஈர்த்திருக்கிறது.
இதன் காரணமாக ஆங்காங்கே வன்முறைகளும் இடம்பெறுகின்றன இதன் நேரடி மறைமுக விளைவுகளின் தாக்கங்களாக பெண்களும் சிறுவர்களும் இளையோரும் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்.
அத்துடன் சீரற்ற பாடசாலை வரவு, இடை விலகல்கள், கல்வியில் பின்னடைவு ஆகியவை இடம்பெறுகின்றன என்பது தரவுத் திரட்டல்களின் அடிப்படையில் கண்டறியப்பட்டுள்ளது.
இது விடயமாக சமூக மட்ட விழிப்புணர்வூட்டல்கள் திட்டமிடப்பட்டு முதற் கட்டமாக பாடசாலை மாணவர்கள் சுமார் 100 பேரைiயும் பிரதேசத்தில் மதுப்பாவனையின் விளைவுகளால் பாதிக்கப்பட்ட பெண்களையும் இணைத்து சமூக விழிப்பூட்டலில் பங்கு பெறச் செய்யப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களே எதிர்காலத் தலைவர்கள் என்ற அடிப்படையில் இந்த வேலைத் திட்டம் புதன்கிழமை(04.06.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சட்ட விரோத மது விற்பனைக்கு எதிராக விழிப்புணர்வு நடை பவனியும் தெரு நாடகமும் வவுணதீவுப் பிரதேசத்தில் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் பிரதேச செயலகம், பொலிஸ், பாடசாலை நிருவாகம், கல்வி வலயம் என்பவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் தமது முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றார்கள்.
இந்த விழிப்புணர்வூட்டல் நிகழ்வுகளில் வவுணதீவு, ஏறாவூர்ப்பற்று ஆகிய பிரதேச செயலாளர் பிரவுகளுக்கான சேர்க்கிள் இளம் பெண்கள் அமைப்பின் வெளிக்கள இணைப்பாளர்களான கே.லக்ஷானா, கே.ஜெயவாணி, ஆகியோருட்பட சேர்க்கிள் பரிந்துரை வலையமைப்பிலுள்ள பயனாளிகளும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment