களுவாஞ்சிகுடி அருள்மிகு கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு உத்சவம் திருக்கதவுத்திறத்தலுடன் ஆரம்பம்.
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி மிகவும் பிரசித்தி வாய்ந்த அருள்மிகு கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவத்தின் திருக்கதவுத்திறத்தல் இன்றைய தினம் (03.06.2025) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இப்பெருவிழாவில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (08.06.2025) கன்னி கால் வெட்டு சடங்கும் செவ்வாய்கழமை(10.06.2025) நெல் குற்றுதல் சடங்கும் இடம்பெற்று புதன்கிழமை(11.06.2025) அதிகாலை திருக்குளிர்த்தி வைபவத்தோடு திருக்கதவு பூட்டுதல் நிகழ்வோடு இவ்வருடத்திற்கான திருக்கடங்கு நிறைவு பெறவுள்ளது.
பூஜை நிகழ்வுகள் யாவும் ஆலய பிரதம கட்டாரி சிவ ஸ்ரீ க.தரிஷ்சனன் குழுக்கள் தலைமையில் இடம்பெறுகின்றன.
0 Comments:
Post a Comment