3 Jun 2025

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு ஒரு கோடி ரூபா பெறுமதியான ஸ்கேன் இயந்திரம் வழங்கி வைப்பு.

SHARE

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு ஒரு கோடி  ரூபா பெறுமதியான ஸ்கேன் இயந்திரம் வழங்கி வைப்பு.

மட்டக்கப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு ஒருகோடி ரூபா பெறுமதியான நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட (Ultra Sound Scan) ஸ்கேன் இயந்திரம் ஒன்று இன்று செவ்வாய்கிழமை(03.06.2025) வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

இலண்டனில் இருந்து அன்பளிப்பு செய்யப்பட்ட இவ்வியந்திரத்தை

இதனை போராசிரியர் செல்வா பங்கஜன், மற்றும்

வைத்தியர் தர்ஷினி பங்கஜன் அகியோரால் இதன்போத உத்தியோக பூர்வமாக வைத்தியசாலை நிருவாகத்திடம் ஒப்படைத்துள்ளனர். 

இவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் க.புவனேந்திரநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  மகப்பேற்று வைத்திய நிபுணர் வசந்தராஜா, பிரண்ஸ் ஒப் வெற்ற்றிகலோ எனும் அமைப்பின் பிரதிநிதிகள், வைத்தியசாலையின் ஏனைய வைத்தியவர்கள், தாதியர்கள், வைத்தியசாலை நலம்புரிச் சங்கத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மகப்பேற்றுத் தாய்மாருக்கான சேவைகள், பெண்நோயியல் சம்பந்தமான சேவைகள், கருவள சிகிச்சை சேவைகள் போன்றவற்றை மிகத் துல்லியமாக முன்கூட்டியே கண்டறிந்து அதற்கான சிகிச்சை முறைகளை மேற்கொள்வதற்கு உதவுவதன் மூலம் 180,000 மக்களை உள்ளடக்கிய இப்பிரதேசத்தின் எதிர்கால சந்ததியினரை வளமும் ஆற்றலும் மிக்க சந்ததியினராக உருவாக்குவதற்கு மிக உறுதுணையாக இருக்கும் இவ்வியந்திரம் பலத்த பக்க துணையாக அமையும் என இதன்போது வைத்தியர்கள் தெரிவித்தனர். 

மிகவும் பெறுமதி வாய்ந்த இவ்வியந்திரத்தை வழங்குவதற்கு உறுதுணையாக நின்று ஒழுங்குகளை மேற்கொண்ட Friends of Batticaloa Hospitals Charity அமைப்பின் வைத்தியர் காந்தா நிரஞ்சன் வைத்திய அத்தியட்சகர் வைத்திய அதிகாரி கா.புவனேந்திரநாதன் மகப்பேற்று நிபுணர் வைத்தியர் கே.வசந்தராஜா உள்ளிட்ட அனைவருக்கும் வைத்திய சாலை சமூகம் நன்றியறிதலைத் தெரிவித்துள்ளது.





















 

SHARE

Author: verified_user

0 Comments: