திட்டங்களுக்கான ஒப்புதல் - தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஆட்சேபனை.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதிகள் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படாமல் அவைகள் மேலதிக ஒப்புதலுக்காக வழங்கப்பட்டதற்காக தனது கடுமையான ஆட்சேபனையையும் எதிர்ப்பையும் தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் இ.சிறிநாத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் சனிக்கிழமை(29.03.2025) நடைபெற்ற கூட்டம் ஒன்றின்போது இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…
இவ்வாறான அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதிப் பங்கீடுகளின் போது சக பாராளுமன்ற உறுப்பினர்களையும், குறிப்பாக தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடைய கருத்துக்களையும், அவர்களுடைய அபிவிருத்தி முன்மொழிவுகளையும் உள்ளடக்கி இந்த நிதி பங்கீடானது எதிர்காலத்தில் செயல்படுத்தப்பட வேண்டும். என தெரிவித்திருந்தார்.
அக்கூட்டத்தின்போது கிழக்கு மாகாணத்தில் தாதியர்களின் தெரிவு, மேலும் கடந்த கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் இதுவரை காலமும் எவ்வாறு பின்தொடரப்பட்டு அவற்றுக்கான தீர்வுகள் கிடைக்கப்பெற்றனவா என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
0 Comments:
Post a Comment