19 Mar 2025

மட்டக்களப்பில் அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் வேட்பு மனுதாக்கல்.

SHARE

மட்டக்களப்பில் அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் வேட்பு மனுதாக்கல்.

இடம்பெற  உள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை புதன்கிழமை பழைய மாவட்ட செயலகத்தில் அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் தாக்கல் செய்தன. 

தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தலைமையில் புதன்கிழமை(19.03.2025) தமது கட்சிக்கான  தாக்கல் செய்தனர். இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியும் கட்சியும் மக்கள் போராட்ட முன்னணியும் நான்கு சுயேச்சை குழுக்களும் தமக்கான தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். 

இதேவேளை தேசிய மக்கள் சக்தியின் வேட்பு மனு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையிலும் தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பனம்  பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா தலைமையில் தலைமையில் செலுத்தப்பட்டது.

 












SHARE

Author: verified_user

0 Comments: