9 Mar 2026

சர்வதேச தரத்திற்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு எமது பெண் முயற்சியாளர்கள் உள்ளார்கள்-பிரதேச செயலாளர் சிவப்பிரியா.

SHARE

சர்வதேச தரத்திற்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு எமது பெண் முயற்சியாளர்கள் உள்ளார்கள்-பிரதேச செயலாளர் சிவப்பிரியா.

கிழக்கு மாகாண ஆளுனரின் உத்தரவுக்க அமைய மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இம்முறை சர்வதேச மகளிர்; தின நிகழ்வுகள் இடம் பற்று வருகிறன. 

இதேவேளை “பெண் எழும்போது நாடு எழும் எனும் இவ்வருட  கருப் பொருளுக்கமைவாக பல்வேறு நிகழ்வுகள் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

 

இந்நிலையில்  மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில்  பெண்கள் தலைமை தாங்கும் முயற்சியாளர்களின் உள்ளுர் உற்பத்தி கண்காட்சி நிகழ்வொன்று  திங்கட்கிழமை(09.03.2026)இடம்பெற்றது

 

இதன்போது உள்ளுர் உற்பத்தி ஆடைகள், கைப்பணி பொருட்கள், நஞ்சற்ற மரக்கறிகள், பழங்கள், உணவு வகைகள், வீட்டு அலங்கார பொருட்கள், தேன், வீட்டு பாவனைப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள், என்பன காட்சிப் படுத்தப்பட்டிருந்தன

 

சர்வதேச தரத்திற்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு எமது பெண் முயற்சியாளர்கள் உள்ளார்கள் என இதன்போது பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினம் தெரிவித்தார்.
























SHARE

Author: verified_user

0 Comments: