நள்ளிரவில் வயற்கண்டத்திற்குள் புகுந்து
வேளாண்மையைச் துவம்சம் செய்த காட்டு யானைக்கூட்டம்.
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று, பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆனைகட்டியவெளி வயல் கண்டத்திற்குள் புதன்கிழமை அதிகாலை(12.02.2025) வேளை புகுந்த காட்டுயானைகள் அங்கு செய்கை பண்ணப்பட்டிருந்த பெரும்போக வேளாண்மைச் செய்கையின் பல ஏக்கர் வயல்நிலங்களை சேதப்படுத்திவிட்டுள் சென்றுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
தற்போது செய்கைபண்ணப்பட்டுள்ள பெரும்போக வேளாண்மைச் செய்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்டு வரப்படுகின்றன. அண்மையில் ஏற்பட்டிருந்த பலத்த மழை வெள்ளத்தில் அழிந்துபோய் மீதமாகவுள்ள தமது வாழ்வாதாரம் தொழிலான வேளாண்மைச் செய்கையை அறுவடை செய்வதற்கு முன்னமே காட்டு யானைகள் இவ்வாறு துவம்சம் செய்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் அங்கலாய்க்கின்றனர்.
காட்டுயானைகளிடமிருந்து தமது வேளாண்மைச் செய்கையைப் பாதுகாப்பதற்காக இரவு முழுவதும் நடு நிசியிலிருந்து பாதுகாக்க வேண்டிய நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தமது வயற் பகுதியை அண்மித்துள்ள சிறிய சிறிய பற்றைக் காடுகளிலும், வாய்க்கால் ஓரங்களிலும் இவ்வாறு காட்டுயானைகள் தங்கி நின்று இரவு வேளைகளில் வயல் நிலங்களுக்குள் உட்புகுந்து வயல்நிலங்களை துவம்சம் செய்து வருவதனால் தமது இவ்வருடத்தின் வாழ்வாதாரம் தொழில் இன்னும் பாரிய நட்டத்தை ஏற்படுத்துவதாக நெற்பயிரை இரவு வேளையில் யானைகளின் அழிவுகளிலிருந்து பாதுகாக்கதற்காக காவல்காத்து வருவதாகவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவாங்கரைப்
பிரதேசத்தில் மிக நிண்ட காலமாகவிருந்து காட்டுயானைகளின் தொல்லைகளும், அட்டகாசங்களும்
அதிகரித்துள்ளதுடன், யானைகள் கிராமங்களுக்குள் உட்புகாமலிருப்பதற்காக யானைப் பாதுகாப்பு
வேலைகளை அமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்தும் அது இதுவரையில் நிறைவேறவில்லை
எனவும் விவசாகிகள் தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment