மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் புதன்கிழமை(19.02.2025) குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
குருக்கள்மடம் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் மற்றும், குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய அதிபர் எஸ்.சிறிதரன் மற்றும் மட்டக்களப்பு வாழ் குருக்கள்மடம் ஒன்றியத்தின் முக்கிய பிரமுகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது ஆரம்பப் பிரிவைச் சேர்ந்த 100 மேற்பட்ட மாணவர்களுக்கு மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment