300 ஆண்டுகளுக்கு பின் வரும் பெரும் சிவராத்திரி
விரத பெரு விழாவை முன்னிட்டு மட்டக்களப்பு
சிவன் ஆதீனத்தில் 108 சிவ லிங்கங்களுக்கு
நல்லெண்ணெய் திருமஞ்சனம் சாத்தும் நிகழ்வு.
சிவராத்திரி பெரு விழாவை முன்னிட்டு மட்டக்களப்பு சிவன் ஆதீனத்தில் 108 சிவலிங்கங்களுக்கு நல்லெண்ணெய் திருமஞ்சனம் சாத்தும் நிகழ்வு புதன்கிழமை(26.02.2025) சிறப்பாக இடம்பெற்றன.
செந்தமிழ் ஆகம முறைப்படி இவ்ஆலய பிரதமகுரு சிவ ஸ்ரீ முருகப்பிள்ளை ஜெயபாலன் குருக்களினால் விசேட பூஜைகள் நடைபெற்றன. மட்டக்களப்பு சிவன் ஆதீனத்தில் செந்தமிழ் ஆகம முறைப்படி பூசைகள் அர்ச்சனைகள் இடம் பெறுவது விசேட அம்சமாகும்.
சிவராத்திரியை முன்னிட்டு விரதம் இருக்கும் அடியார்களுக்காக சிவலிங்கங்களுக்கு பூசை செய்வதற்கான சந்தர்ப்பம் இவ்வாலயத்தில் வழங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
மட்டக்களப்பு மயிலம்பாவளியில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிவன் ஆதீனமானது சிவராத்திரியை முன்னிட்டு புதன்கிழமை காலை தொடக்கம் விசேட பூஜைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சைவ சித்தாந்தத்தையும் பன்னிரு திருமுறை களையும் அடிப்படையாகக் கொண்டு ஆக முறைப்படி ஆலயத்தில் பூஜைகள் இடம் பெறுகின்றமை விசேட அம்சமாகும்
300 வருடங்களுக்குப் பின்பு அதே நாளில் இம்முறை சிவராத்திரி வருவது இம்முறை விசேட அம்சமாகும். அடியார்களது மனக்குறைகளை நிறைவேற்றிக் கொள்வதோடு அவர்களது வேண்டுதலும் இந்நாளில் நிறைவேற்றப்படுவது என்ற விசேட அம்சமாகும் இந்நாளில் சிவனை வழிபடுவது பெரும் பாக்கியமாகக் கருதப்படுகிறது.
இதில் பெருமளவான பக்தர்கள் தங்களின் கரங்களினால் 108 சிவலிங்கங்களுக்கு நல்லெண்ணெய், திருமஞ்சனம் சாத்தும் நிகழ்வு நடைபெறுகின்றன.
0 Comments:
Post a Comment