13 Jan 2025

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக் கதிர்காம சுவாமி ஆலயத்தின் ஆருத்ரா அபிசேக திருவிழா.

SHARE

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக் கதிர்காம சுவாமி ஆலயத்தின் ஆருத்ரா அபிசேக திருவிழா.

மார்கழி மாதத்தில் வரும் சிறப்பு வாய்ந்த விரதங்களுள் ஒன்றாக காணப்படும் திருவெம்பாவை விரதத்தின் தீர்த்தோற்சவமும், ஆருத்ரா அபிசேக திருவிழாவும், கிழக்கில் மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக் கதிர்காம சுவாமி ஆலயத்தில் இடம்பெற்றது.

ஞாயிற்றுக்கிழi(12.01.2025) ஆலயத்தில் இடம்பெற்ற விசேட கிரியை வழிபாடுகளை தொடர்ந்து நடராச மூர்த்தியோடு சேர்ந்த சிவகாமி அம்பாள் சமதேரராய் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பின்னர் உள் வீதி உலா வருதல் நிகழ்வு இடம்பெற்றது.

தோடர்ந்து(13.01.2025) அதிகாலையில் விசேட கிரியை வழிபாடுகளை தொடர்ந்து, நடராச மூர்த்தியோடு சேர்ந்த சிவகாமி அம்பாள் சமதேரருக்கு ஆருத்ரா தரிசனம் இடம்பெற்று சமுத்ர தீர்த்தோற்சவம் இடம்பெற்றது. இவ்வாலயத்தில் திருவெம்பாவை காலத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

ஆலய கிரியை, பூஜை வழிபாடுகள் யாவும் ஆலய பிரதம குரு  சிவ ஸ்ரீ நவரத்ன முரசொலி மாறன் குருக்கள் தலைமையிலான குருமாரினால் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 























 


SHARE

Author: verified_user

0 Comments: