12 Jan 2025

களுவாஞ்சிகுடி நகரில் களைகட்டியுள்ள தைப்பொங்கல் பண்டிகை வியாபாரம்

SHARE

களுவாஞ்சிக்குடி நகரில் களைகட்டியுள்ள தைப்பொங்கல் பண்டிகை   வியாபாரம்.

உழவர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி நகரில் அமைந்துள்ள பொதுச் சந்தையில் பொதுமக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதை ஞாயிற்றுக்கிழமை (12.01.2025) அவதானிக்க முடிந்தது. 

வர்த்தக நிலையங்களிலும், ஏனைய வியாபார ஸ்தலங்களிலும் வியாபாரம் களை கட்டிய நிலையில் மக்கள் புத்தாடைகளையும், ஏனைய வீட்டு பாவனை பொருட்களையும், மண்பானை, மண்சட்டி போன்ற பொங்கலுக்கான பொருட்களை கொள்வனவு செய்வதை காண முடிந்தது. 

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்புத் தெகுதியில் படுவான் கரைப் பிரதேசத்தையுமும், எழுவான் கரையையும் இணைக்கும் பிரதான நகரமாக களுவாஞ்சிக்குடி நகர் பிரதான வர்த்தக நிலையமாக விளங்குகிறமை குறிப்பிடத்தக்கதாகும்.









SHARE

Author: verified_user

0 Comments: